செய்திகள் :

அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர்

post image

பெங்களூரு: கர்நாடகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிவைத்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் மார்ச் 7-ஆம் தேதி முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, ரூ. 2 கோடி வரையிலான கட்டுமானப் பணிகள், ரூ. 1 கோடி வரையிலான சரக்கு, சேவைக்கான ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்வதற்காக கர்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டம் 1999-இல் திருத்தம் கொண்டுவர கர்நாடக அமைச்சரவை மார்ச் 14-ஆம் தேதி முடிவு செய்தது.

அதன்படி, இந்த சட்டத் திருத்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி தாக்கல் செய்தார். தற்போதைய சட்டவிதிகளின்படி, கட்டுமானப் பணி ஒப்பந்தப் பணிகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 24 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு-1-க்கு 4 சதவீதம், பிரிவு-2ஏ-க்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் உட்பிரிவு-2ஏ-இல் முஸ்லிம்களை சேர்த்து 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகிறது. அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினரிடையே காணப்படும் வேலையின்மைக்கு தீர்வு காணவும், அரசு கட்டுமானப் பணிகளில் அந்தச் சமுதாயத்தினரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பின் உட்பிரிவு 2ஏ-இல் இருக்கும் முஸ்லிம்களுக்கு ரூ. 2 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முற்படுவதாக சட்டமசோதாவின் நோக்கக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணி நீங்கலாக, ரூ.1 கோடி வரையிலான சரக்கு கொள்முதல்-சேவை ஒப்பந்தப் பணிகளில் பட்டியினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமசோதாவின் நோக்கக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த வகையில், பட்டியினத்தவருக்கு 17.5 சதவீதம், பழங்குடியினருக்கு 6.95 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோர் உட்பிரிவு-1-க்கு 4 சதவீதம், உட்பிரிவு-2ஏ-க்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் உட்பிரிவு-2ஏ-இல் முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடாக 4 சதவீதம் வழங்கப்படுகிறது.

இந்த சட்டத் திருத்த மசோதாவால் அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் நேரப்போவதில்லை என்று சட்டமசோதாவின் நோக்கக் குறிப்பில் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் மார்ச் 21-ஆம் தேதி அரசு ஒப்பந்தப் புள்ளிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா கூச்சல் குழப்பத்துக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தலைமையில் போராட்டம் நடத்தி, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு சட்டமசோதாவை அனுப்பிவைத்துள்ளார்.

ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே

ஹிந்தியை கட்டாயமாக்க மகாராஷ்டிரத்திலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழ... மேலும் பார்க்க

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்க... மேலும் பார்க்க

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க