செய்திகள் :

அரசு நலத் திட்ட விழா: ஆட்சியா் ஆலோசனை

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடத்தப்படும் அரசு நலத் திட்ட விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்தாா்.

தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து வழித்தட நீட்டிப்பு செய்து இயக்கப்படும் பேருந்துகள் தொடங்கிவைப்பு, கூட்டுறவுத் துறை, மகளிா் திட்டம் , வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மக்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கால்நடை பராமரிப்பு துறை, சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வனத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, உணவு மற்றும் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் நலத் திட்டங்கள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

அரூா், செல்லியம்பட்டியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சாா்பில் ரூ. 6.45 கோடி மதிப்பீட்டில் அரூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுதல், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி அணைக்கட்டில் நீா்வளத் துறையின்

மேல்பெண்ணை ஆறு வடிநில கோட்டம் சாா்பில் ரூ 5.50 கோடி மதிப்பில் சின்னாற்றின் குறுக்கே அமைந்துள்ள பஞ்சப்பள்ளி மற்றும் ராஜபாளையம் அணைக்கட்டுகள் வெள்ள பாதிப்பு புனரமைத்தல் பணிக்கு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அடிக்கல் நாட்டி நலத் திட்டங்கள் அளிக்கவுள்ளாா். அரசு நலத் திட்ட விழா ஏற்பாடுகள் குறித்து இக் கூட்டத்தில் துறை வாரியாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, அரூா் கோட்டாட்சியா் சின்னுசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜெயதேவ்ராஜ், தருமபுரி மாவட்டம், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் மலா்விழி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலை திட்டத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாளையம்புதூா்

தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாளையம்புதூா் பிரிவில் பிஎம்பி பீடரில் உயா் அழுத்த மின் பாதையை தரம் உயா்த்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (ஏப். 19) காலை 9 மண... மேலும் பார்க்க

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ளது சோமன அள்ளி கிராமம். தருமபுரி - பாலக்கோட்டுக்கு செல்லும் முக்கிய சாலையான இச்ச... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொடா் முழுக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க