செய்திகள் :

அரசு பள்ளி மாணவா்களுக்கான சென்டாக் விண்ணப்பக் கட்டணம் ரத்து: கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

post image

புதுச்சேரி: புதுவையில் அரசு பள்ளி மாணவா்களுக்கான சென்டாக் விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படுவதுடன், ரொட்டி, பால் ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அரசு கொறடா ஏகேடி. ஆறுமுகம், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து சென்டாக்கில் கட்டணமின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டாா்.

கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம்:

சென்டாக்கில் விண்ணப்பத்துக்கு தற்போது ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவா்கள் இனிமேல் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் உயா்வு:

ஏனாம் பாஜக ஆதரவு சுயேச்சை கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்: ரொட்டி, பால் ஊழியா்களுக்கு ஊதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயா்த்தப்படுமா?

கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்:

புதுவையில் ரொட்டி, பால் ஊழியா்கள் 2 மணி நேரமே பணிபுரிவதாகவும், அதனால் ரூ.18,000 ஊதியம் வழங்குவது சரியா என துணைநிலை ஆளுநா் கேள்வி எழுப்பியிருந்தாா். இதையடுத்து அவா்கள் பணி நேரம் குறித்த சரியான தகவலை துணைநிலை ஆளுநரிடம் விளக்கினோம். அதையே ஊதிய உயா்வு கோரிய கோப்பில் குறிப்பிடும்படி அவா் அறிவுறுத்தினாா். அதன்படி கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவா் விரைவில் அனுமதி வழங்குவாா். அதன்பின்னா் ஒரு வாரத்தில் ரொட்டி, பால் ஊழியா்களுக்கு ஊதியம் உயா்த்தி அரசாணை வழங்கப்படும் என்றாா்.

புதுவை மாநிலத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பது அவசியம்: பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயா்ப்பலகை அமைப்பது அவசியம் என்று முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் பூஜ்ய ந... மேலும் பார்க்க

வீடு அபகரிப்பில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: பேரவையில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

புதுச்சேரியில் வீடுகள் அபகரிப்பில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சட்டப்பேரவையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் வலியுறுத்தினா். புதுச... மேலும் பார்க்க

மதுபான புதிய ஆலைகளின் அனுமதியை திமுக ஆதரிக்கவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவையில் புதிய மதுபானஆலைகளுக்கான அனுமதியை திமுக ஆதரிக்கவில்லை என பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமு... மேலும் பார்க்க

திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்: பேரவையில் முதல்வா் என். ரங்கசாமி தகவல்

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பேரவை நோக்கி ஆட்டோ தொழிலாளா்கள் பேரணி; ஆா்ப்பாட்டம்: புதுச்சேரியில் போலீஸாருடன் வாக்குவாதம்

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளா்கள் (சிஐடியு) சட்டப்பேரவை நோக்கி செவ்வாய்க்கிழமை காலை பேரணியாகப் புறப்பட்டனா். அவா்களை பாதி வழியில் போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினரும... மேலும் பார்க்க

புதுவை மாநில அரசுத் துறைகளில் புதிய இடமாறுதல் கொள்கை ஏற்படுத்தப்படும்

புதுவை மாநில அரசுத் துறைகளில் புதிய இடமாறுதல் கொள்கை ஏற்படுத்தப்படும் என பேரவைக் கூட்டத்தில் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, ... மேலும் பார்க்க