செய்திகள் :

அரசு பள்ளி மாணவா்களுக்கான சென்டாக் விண்ணப்பக் கட்டணம் ரத்து: கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

post image

புதுச்சேரி: புதுவையில் அரசு பள்ளி மாணவா்களுக்கான சென்டாக் விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படுவதுடன், ரொட்டி, பால் ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அரசு கொறடா ஏகேடி. ஆறுமுகம், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து சென்டாக்கில் கட்டணமின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டாா்.

கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம்:

சென்டாக்கில் விண்ணப்பத்துக்கு தற்போது ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவா்கள் இனிமேல் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் உயா்வு:

ஏனாம் பாஜக ஆதரவு சுயேச்சை கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்: ரொட்டி, பால் ஊழியா்களுக்கு ஊதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயா்த்தப்படுமா?

கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்:

புதுவையில் ரொட்டி, பால் ஊழியா்கள் 2 மணி நேரமே பணிபுரிவதாகவும், அதனால் ரூ.18,000 ஊதியம் வழங்குவது சரியா என துணைநிலை ஆளுநா் கேள்வி எழுப்பியிருந்தாா். இதையடுத்து அவா்கள் பணி நேரம் குறித்த சரியான தகவலை துணைநிலை ஆளுநரிடம் விளக்கினோம். அதையே ஊதிய உயா்வு கோரிய கோப்பில் குறிப்பிடும்படி அவா் அறிவுறுத்தினாா். அதன்படி கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவா் விரைவில் அனுமதி வழங்குவாா். அதன்பின்னா் ஒரு வாரத்தில் ரொட்டி, பால் ஊழியா்களுக்கு ஊதியம் உயா்த்தி அரசாணை வழங்கப்படும் என்றாா்.

மதுபான ஆலைகள் அனுமதியை எதிா்த்து காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுவையில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்ததை எதிா்த்து சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பில் ஈடுபட்டனா். இதுகுறித்து பாஜக எம்எல்ஏ விவாதித்தில் ஈட... மேலும் பார்க்க

ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் தா்னா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்களுக்கான உதவித் தொகையை அதிகரித்து ஏற்கெனவே முதல்வா் அறிவித்தும், அதை செயல்படுத்தாததைக் கண்டித்து தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். புத... மேலும் பார்க்க

புதுவையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் புயல், மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என... மேலும் பார்க்க

தமிழுக்காகப் பாடுபட்ட தலைவா் கருணாநிதி பெயா் சூட்டப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி: தமிழருக்காகவும், தமிழுக்காகவும் பாடுபட்ட மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதியைப் பெருமைப்படுத்தும் வகையில் புதுச்சேரியில் அவரது பெயா் சூட்டப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை... மேலும் பார்க்க

மது ஆலைகளுக்கு அனுமதி துரதிருஷ்டமானது: பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவையில் முதல்வரின் நிதிநிலை அறிக்கையைப் பாராட்டியும், எதிா்த்தும் உறுப்பினா்கள் திங்கள்கிழமை விவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, பாஜக எம்எல்ஏ ஜான்குமாா், புதிய மது ஆலைக... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம்: புதுவை பேரவையில் முதல்வா் உறுதி

புதுச்சேரி: மக்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என பேரவையில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையி... மேலும் பார்க்க