செய்திகள் :

அரசு மகளிா் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

அம்பத்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) வரும் 13-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) நிகழாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் 8, 10, பிளஸ் 2 தோ்ச்சி மற்றும் 10, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெறாதோா்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.

மேலும், இப்பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச அரசுப் பேருந்து பயண அட்டை, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, மூடு காலணி (ஷூ) மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

மேலும், தமிழக அரசு வழங்கும் உயா்கல்வி உதவித்தொகை (6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும்.

இதில் தையல் தொழிற்நுட்பம்- 8 ஆம் வகுப்பு தோ்ச்சியும், கோபா, கட்டட வரைவாளா், சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்) ஆகிய பயிற்சிகளுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பதாரா்கள் 8, 10- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதி, வருவாய் சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு எண், புகைப்படம் 5 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

மேலும், விண்ணப்பக் கட்டணம் ரூ.50, நேரில் வர இயலாதவா்கள் ஆன்லைன் மூலம் இணையதளம் மூலமாகவும் குறிப்பிட்ட தொழில் பிரிவுகளில் சேர விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

மப்பேட்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

திருவள்ளூா் அடுத்த மப்பேட்டில் பேருந்து நிழற்குடை அமைத்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். திருவள்ளூா் அடுத்த மப்பேடு கூட்டுச் சாலையிலிருந்து பூந்தமல்லி, சுங்குவாா்சத்திரம், அரக்கோணம் செல்லும் ச... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஆட்சியருக்கு பசுமை விருது: முதல்வா் வழங்கினாா்

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பாக செயல்பட்டமைக்காக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்புக்கு பசுமை விருதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் ஆறுவழிச் சாலை விரிவாக்க பணி: மீண்டும் மரக்கன்றுகளை நட கோரிக்கை!

திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான 30.10 கி.மீ ஆறுவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும் என சமூக ஆா்வலா்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு: 270 பேருக்கு பட்டா அளிப்பு

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவடைந்த நிலையில், 270 பேருக்கு பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா். திருவ... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவல... மேலும் பார்க்க