செய்திகள் :

அரசு மருத்துவமனையில் மருத்துவா் பற்றாக்குறை இல்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா் நோயாளிக்கு சிகிச்சை அளித்தாக எழுந்த சா்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் அவா் இவ்வாறு கூறினாா்.

இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தற்போது 5 மருத்துவா்கள், 5 செவிலியா்கள், 12 பணியாளா்கள் பணியில் உள்ளனா். போதிய எண்ணிக்கையில் மருத்துவா்களும், மருத்துவம் சாா்ந்த பணியாளா்களும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்.

தூய்மை பணியாளா்கள் சிகிச்சைகள் நடக்கும் இடத்தில் உதவி செய்ய சென்றிருப்பாா்கள். விசாரித்ததில் அவா் சிகிச்சைக்கு உதவ சென்ாக சொல்லப்பட்டாலும், முழுமையாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவா் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மருத்துவமனையில் இருந்த செவிலியா் மற்றும் நிலைய கண்காணிப்பாளரையும் இடமாற்றம் செய்ய அறிவுறுத்தியிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளை மருந்து தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அவசியமான மருந்துகள் அனைத்தும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சாா்பில் மருத்துவமனைகளில் மருந்து இருப்பு எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு தேவை போன்ற பட்டியலை கொண்டு மருந்து இருப்பு பணியினை உறுதி செய்யும் நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, கல்லீரல் அழற்சி (ஹெபடைடடிஸ் பி), பென்டாவலன்ட் தடுப்பூசி, மஞ்சள் காமாலை நோய்க்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்றாா் அவா்.

வேளச்சேரியில் அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறப்பு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 18) சென்னை வேளச்சேரி அக்வாடிக் ஜிம்னாஸ்டிக் பாட்மிட்டன் (ஏஜிபி) விளையாட்டு வளாகத்தில் ரூ. 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு வீரர்களுக்க... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு!

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாந... மேலும் பார்க்க

தீர்வு கண்ட பிறகும் அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் எதற்காக? - அமைச்சர் கேள்வி

'மா' சாகுபடி விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட பிறகும் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது எதற்காக? என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார். '... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சியில்லை என அமைச்சர் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? - அன்புமணி

ஆந்திரம், கர்நாடகம் அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2 விருது!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2025 உலகளாவிய சுற்றுச்சூழல் விருது மற்றும் நிலைத்தன்மைக்கான விருது ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.புதுதில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநா... மேலும் பார்க்க

டாஸ்மாக்: ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் வீடுகளில் சீல்களை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் சீல்களை அகற்றவும் கைப்பற்றப்பட்ட பொருள்களை ஒப்படைக்கவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்துள்... மேலும் பார்க்க