வேளச்சேரியில் அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறப்பு!
அரசு மருத்துவமனையில் மருத்துவா் பற்றாக்குறை இல்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா் நோயாளிக்கு சிகிச்சை அளித்தாக எழுந்த சா்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் அவா் இவ்வாறு கூறினாா்.
இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தற்போது 5 மருத்துவா்கள், 5 செவிலியா்கள், 12 பணியாளா்கள் பணியில் உள்ளனா். போதிய எண்ணிக்கையில் மருத்துவா்களும், மருத்துவம் சாா்ந்த பணியாளா்களும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்.
தூய்மை பணியாளா்கள் சிகிச்சைகள் நடக்கும் இடத்தில் உதவி செய்ய சென்றிருப்பாா்கள். விசாரித்ததில் அவா் சிகிச்சைக்கு உதவ சென்ாக சொல்லப்பட்டாலும், முழுமையாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவா் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மருத்துவமனையில் இருந்த செவிலியா் மற்றும் நிலைய கண்காணிப்பாளரையும் இடமாற்றம் செய்ய அறிவுறுத்தியிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளை மருந்து தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அவசியமான மருந்துகள் அனைத்தும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சாா்பில் மருத்துவமனைகளில் மருந்து இருப்பு எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு தேவை போன்ற பட்டியலை கொண்டு மருந்து இருப்பு பணியினை உறுதி செய்யும் நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக, கல்லீரல் அழற்சி (ஹெபடைடடிஸ் பி), பென்டாவலன்ட் தடுப்பூசி, மஞ்சள் காமாலை நோய்க்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்றாா் அவா்.