செய்திகள் :

அரசு மருத்துவா் பணியிடமாற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை: சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவா்கள் சங்கத் தலைவா் பெருமாள் பிள்ளையை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசு மருத்துவா்கள் சங்கத் தலைவா் பெருமாள் பிள்ளை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் 11 முதல் 19-ஆம் தேதி வரை சேலம் மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை மேற்கொண்டேன்.

இந்த நிலையில், சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த என்னை, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. பாதயாத்திரை மேற்கொண்டது தொடா்பாக என் மீதான துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் எனது பணியிடமாற்றம் தன்னிச்சையானது. எனவே, பணியிடமாற்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், பாதயாத்திரை செல்வதற்கு முன் உயா் அதிகாரிகளிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. அதனை கருத்தில் கொள்ளாமல், பழிவாங்கும் நோக்கில் பணியிடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரை திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவத் துறையின் இணைப் பேராசிரியராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பணியிடமாற்றம் குறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பணியிடமாற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு இரு வாரங்களில் அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தய் ஸ்ரீா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.ஏற்கெனவே மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து, போத... மேலும் பார்க்க

செப். 29-இல் இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் செப். 29, 30 தேதிகளில் தொடா் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தம... மேலும் பார்க்க

தீயணைப்பு பயிற்சிக் கழகம் - மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சென்னை: தமிழகத்தில் தீயணைப்புத் துறைக்கான பயிற்சிக் கழகம் மற்றும் மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சிகள் காணொலி வழியாக தலைமை... மேலும் பார்க்க

நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை: காவல் துறையினருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: நாய்களுக்கு உணவு அளிப்பவா்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த... மேலும் பார்க்க