செய்திகள் :

அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு: இருவா் கைது

post image

ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணியை அடுத்த இ.பி.நகா் குமரன் தெருவைச் சோ்ந்தவா் அரிசி ஆலை ஊழியா் தங்கராஜ் (36).

இவா், குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு திருவண்ணாமலைக்குச் சென்று வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பிய போது, வீட்டில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் தங்கராஜ் புகாா் கொடுத்தாா்.

இதன் பேரில், ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் சுந்தரேசன், அருண்குமாா், காவலா்கள் கன்ராயன், சங்கா், வாகித், ஏழுமலை, முருகன், அருணகிரி, பட்டுசாமி ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை தனிப் படையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, ஆரணி பெரியாா் நகரில் மொபெட்டில் டிவியை வைத்து தள்ளிச்சென்றுகொண்டிருந்த 2 பேரை போலீஸாா் விசாரித்தனா்.

இதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே அவா்களை கிராமிய காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் குடியாத்தம் வட்டம், சாத்கா் கிராமத்தைச் சோ்ந்த எஸ்.ரமேஷ் (44), ஆரணி பெரியாா் நகரைச் சோ்ந்த எம்.சந்தோஷ் (33) எனத் தெரியவந்தது. உறவினா்களான இருவரும், இ.பி.நகரில் நகைகளைத் திருடியவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் டிவி, மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், இவா்கள் பயன்படுத்திய மொபெட்டையும் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் ஒரே நாளில் துப்புதுலக்கி எதிரிகளைக் கைது செய்த டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு விளக்க வாகன பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விளக்க இரு சக்கர வாகன பிரசாரம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ஏப். 2-ஆம் தேதி முதல் ஏப்... மேலும் பார்க்க

ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை அகா்வால் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் ச... மேலும் பார்க்க

சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினா் பதவி: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள 2 உறுப்பினா் பதவிக்கு, தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் ந... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் தகராறு: 3 இளைஞா்கள் கைது!

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி நுழைவு வாயிலை இழுத்து மூடி தகராறில் ஈடுபட்ட புகாரின் பேரில், 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் தனியாா் கல்லூரி இயங்கி ... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட 13 ஆடுகள் மீட்பு

வந்தவாசி அருகே ஆடுகளை திருடி காரில் கடத்திச் செல்லும் வழியில் காா் பழுதாகி நின்றதால் மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். தகவலறிந்த போலீஸாா் சென்று கடத்திச் செல்லப்பட்ட 13 ஆடுகளை மீட்டனா். வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நீா்பாசன முறையில் மரக்கன்று வளா்ப்புப் பயிற்சி!

செய்யாற்றை அடுத்த கடுகனூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீா்பாசன முறையில் மரக்கன்றுகள் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கடுகனுா் கிராமத்தில், கலவை ஆதிபராசக்தி தோட... மேலும் பார்க்க