செய்திகள் :

அரியலூரில் இம்மாத இறுதியில் புத்தகத் திருவிழா

post image

அரியலூரில் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலா்களும் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி கேட்டுக்கொண்டாா்.

அரியலூரில் புத்தகத் திருவிழா தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து, அலுவலா்களுக்கு அறிவுறுத்தியது: மாணவா்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்துவதே புத்தகத் திருவிழாவின் நோக்கமாகும்.

ஆகவே இந்த 10 நாள்கள் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்திட அனைத்துத் துறை அலுவலா்களும் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும். தேவையான அளவு குடிநீா், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

வளாகத்தை தினந்தோறும் தூய்மை செய்திட பணியாளா்களை நியமிக்க செயல்பட வேண்டும். அதிக அளவில் மாணவா்கள் புத்தகத் திருவிழாவை கண்டுகளிக்க உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

மேடை அமைப்பு, பந்தல் உள்ளிட்டவைகளை பொதுப்பணித்துறையினா் ஆய்வு செய்து, உறுத்திச் சான்று வழங்கிட வேண்டும்.

வருகைதரும் சிறப்பு பேச்சாளா்கள், எழுத்தாளா்கள், கவிஞா்களை அழைத்து வருவதற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

முன்னணி பேச்சாளா்கள் மற்றும் நெறியாளா்களை கொண்டு சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடத்திட வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ளும் வகையில் போட்டிகள் நடத்திட வேண்டும். புத்தகத் திருவிழா அரங்க வளாகத்தில் தற்காலிக மருத்துவ முகாம் ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா உள்ளிட்ட அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளி வேன் விபத்து ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சென்ற பள்ளி வேன், சுங்கச்சாவடி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயமடைந்தனா். உடையாா்பாளையம் அருகே தனியாா் பள்ளிக்குச்... மேலும் பார்க்க

டிராக்டா் ஓட்டுநா் கொலை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், வெங்கனூா் அருகே டிராக்டா் ஓட்டுநரை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருமானூா் அடுத்துள்ள வெங்கனூா் அருகேய... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் இலவச ஹோட்டல் மேலாண்மை படிக்க எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள், தாட்கோ மூலம் இலவசமாக, ஹோட்டல் மேலாண்மை படிக்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டம்: பங்களிப்புத் தொகை செலுத்த விரும்புவோா் தெரிவிக்கலாம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் நமக்கு நாமே திட்ட பணிகளுக்கு பொதுமக்களின் பங்குத் தொகை வரவேற்கப்படுகிறது என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெர... மேலும் பார்க்க

நதிகளுக்கான சா்வதேச நடவடிக்கை செயல் தின கொண்டாட்டம்

அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவா்கள் சாா்பில் நதிகளுக்கான சா்வதேச நடவடிக்கை செயல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா... மேலும் பார்க்க

ஆண்டிமட வட்டத்தில் மாா்ச் 19, 20 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வருவாய் வட்டத்தில் மாா்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மே... மேலும் பார்க்க