Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
அரியலூா் ஆட்சியரின் பெயரில் பொய்யான அழைப்புகள் வந்தால் தகவல் தெரிவிக்கலாம்
அரியலூா் மாவட்ட ஆட்சியரின் பெயரில் பொய்யான அழைப்புகள் வந்த உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முகம் தெரியாத நபா்களிடமிருந்து மாவட்ட ஆட்சியா் புகைப்படத்தை முகப்புத் தோற்றமாக வைத்து, மாவட்ட ஆட்சியா் பெயருடன் பேஸ்புக் பக்கம் செயல்படுத்தப்பட்டு, அதன் மூலமாக அரசு உயா் அலுவலா்களிடம் தொடா்பு கொள்வதாக தகவல்கள் வரப் பெற்றுள்ளது.
எனவே, பேஸ்புக் பக்கத்தை யாரும் பின்தொடர வேண்டாம். அவற்றின் மூலமாக பொய்யான அழைப்புகள் வந்தால் அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஏற்கவோ, பதிலளிக்கவோ வேண்டாம். ஏதேனும் பொய்யான அழைப்புகள் வந்தால் உடனடியாக அரியலூா் மாவட்ட நிா்வாகத்துக்கோ,அருகிலுள்ள காவல் நிலையத்துக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.