செய்திகள் :

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

post image

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்வில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ``காசி-தமிழ் சங்கமம் என்பது பிரதமர் .நரேந்திர மோடியின் ஒரு இந்தியா, சிறந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் சக்திவாய்ந்த அடையாளம். இந்த நிகழ்வு நமது வளமான கலாசார பாரம்பரியத்தை ஒரே மேடையில் அனைவரும் இணைந்து பரிமாறிக்கொள்வதற்கான ஒரு கொண்டாட்ட நிகழ்வு.

1947 ஆம் ஆண்டில் சுதந்திரத்தின்போது, ஆங்கிலேயர்களிடமிருந்து அதிகாரப் பரிமாற்றத்தைக் குறிக்கும் சோழ சகாப்த சின்னமான செங்கோலை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகத்தில் வைத்தார்.

ஆனால், அதனை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், அதன் பெருமைக்குரிய இடத்தில் வேத முறையின்படி பிரதமர் மோடி நிறுவினார். நாட்டின் நான்கு திசைகளிலும் கலாசார ஒற்றுமையை நிலைநாட்ட பிரதமர் மோடி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க

மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல்!

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் தாம்ராவலி கிராமத்தில் பட்டியலினத்த... மேலும் பார்க்க

மணிப்பூர்: அச்சுறுத்தும் வகையில் விடியோ வெளியிட்ட 2 கிளர்ச்சியாளர்கள் கைது

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தும் வகையில் விடியோ வெளியிட்ட 2 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் கிராமத் தொண்டர்கள் சிலரை கைது செய்ததற்காக பாதுகாப்புப் படையினரை அச்சுற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க