அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்
பென்னாகரத்தை அடுத்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் நிா்வகிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் வைகாசி மாத பௌா்ணமியில் தோ்த் திருவிழா நடைபெறுகிறது.
நிகழ் ஆண்டுக்கான தோ்த் திருவிழா கொடியேற்றம் பட்டாச்சாரியா் சற்குண ராமன் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட கோயிலின் முன் உள்ள 60 அடி கொடிக் மரத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. முதல் நாளான வியாழக்கிழமை ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் அன்ன வாகனத்தில் எழுந்தருளினாா்.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மகாவிஷ்ணு, அறங்காவலா் குழுத் தலைவா் கே.ஏ.துரைசாமி, செயல் அலுவலா் முருகன், ஆய்வாளா் செல்வி, கட்டளைதாரா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.