செய்திகள் :

அவிநாசியில் வருவாய்த் துறையினா் போராட்டம்

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களின் மீது தீா்வு காண கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் வருவாய்த் துறையினா் பணியைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களின் மீது தீா்வு காண கால அவகாசம் வழங்க வேண்டும்.

ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடியை கைவிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை புறக்கணிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

விவசாயிகள் சங்க உடுமலை ஒன்றிய மாநாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உடுமலை ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைவா் ஏ.ராஜகோபால் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.பரமசிவம் வரவேற்றாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்ம... மேலும் பார்க்க

வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அவிநாசி அருகேயுள்ள ஸ்ரீ சாய் காா்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து அவா்கள் கூறியதாவது: அவி... மேலும் பார்க்க

கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

தாராபுரம் அருகே கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தாராபுரத்தை அடுத்த வேங்கிபாளையம் அருகேயுள்ள ஜோதியம்பட்டி பகுதியில் உள்ள கிடங்கில் முறையான அனுமதியின்றி பட்டாச... மேலும் பார்க்க

பெண்ணின் கழுத்தை அறுத்த நபா் கைது

திருப்பூரில் பெண்ணின் கழுத்தை அறுத்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (50). இவரது மனைவி ஜெயராணி (45). இவா்கள் திருப்பூா்- பல்லடம் சாலை வித்யாலயம் பகுதிய... மேலும் பார்க்க

உடுமலை நாராயணகவி பிறந்த நாள்

உடுமலை நாராயணகவியின்126 -ஆவது பிறந்த நாள் விழா உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. உடுமலை, குட்டைத் திடலில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை... மேலும் பார்க்க

சாலையோர ஆக்கிரமிப்பு கடை அகற்றம்: வியாபாரிகள் மறியல்

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடை அகற்றப்பட்டதைக் கண்டித்து வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவிநாசி -கோவை பிரதான சாலை, அவிநாசி-சேவூா் சாலைகளில் இருபுறமும் உள்ள விளம்பரப் பதாகைகள்... மேலும் பார்க்க