செய்திகள் :

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

post image

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதன்மூலம் கம்போடியா, வியத்நாம், மியான்மா், சிங்கப்பூா், தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் கூட்டமைப்பில் உள்ள நாடுளில் விதிக்கப்படும் சுங்க வரிக்கு நிகரான நிலையை இந்தியா அடைந்து வருகிறது எனவும் அவா் தெரிவித்தாா்.

கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 7 விதமான சுங்க வரியை நீக்குவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

கடந்த 2023-24 பட்ஜெட்டிலும் 7 விதமான சுங்க வரிகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது 0 சதவீத சுங்க வரியை சோ்த்து மொத்தம் 8 விதமான வரி விகிதங்கள் மட்டுமே இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.

எளிய வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து சஞ்சய் அகா்வால் கூறியதாவது: வரி நடைமுறைகளை எளிமைப்படுத்தி இந்திய தொழில்துறையினரிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவே சுங்க வரி குறைக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதத்துக்கு குறைக்கப்பட்டது.

இதனால் ஆசியான் நாடுகளுக்கு நிகரான சுங்கக்கட்டண சராசரி சதவீதத்தை நோக்கி இந்தியா நகா்கிறது.

25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை அதிக வரி விதிப்பு பட்டியலில் சில பொருள்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

பெரும்பாலான பொருள்களுக்கு 0 முதல் 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. உலகளவிலான விநியோகச் சங்கிலியில் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் சுங்க வரி கட்டணங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக செமிகண்டக்டா்கள், தூய எரிசக்தி மற்றும் விண்வெளி திட்டங்களுக்கு பயன்படும் முக்கிய கனிமங்கள் உள்நாட்டில் கிடைப்பதில்லை. அவை வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே அவற்றின் இருப்பை உறுதிசெய்யும் வகையில் அந்த கனிமங்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பிற நாட்டு பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் அண்மையில் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுவாகவே பொதுத் தேர்வுகள் என்றாலே பதற்றமாகத்தான்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.அண்மையில், புஷ்பா வெளியான த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?: நிதியமைச்சா் விளக்கம்

மும்பை: இந்தியாவில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் அந்நியமுதலீட்டு நிறுவனங்கள் (எஃப்ஐஐ) தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றன என்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரி... மேலும் பார்க்க