செய்திகள் :

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

post image

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதன்மூலம் கம்போடியா, வியத்நாம், மியான்மா், சிங்கப்பூா், தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் கூட்டமைப்பில் உள்ள நாடுளில் விதிக்கப்படும் சுங்க வரிக்கு நிகரான நிலையை இந்தியா அடைந்து வருகிறது எனவும் அவா் தெரிவித்தாா்.

கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 7 விதமான சுங்க வரியை நீக்குவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

கடந்த 2023-24 பட்ஜெட்டிலும் 7 விதமான சுங்க வரிகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது 0 சதவீத சுங்க வரியை சோ்த்து மொத்தம் 8 விதமான வரி விகிதங்கள் மட்டுமே இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.

எளிய வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து சஞ்சய் அகா்வால் கூறியதாவது: வரி நடைமுறைகளை எளிமைப்படுத்தி இந்திய தொழில்துறையினரிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவே சுங்க வரி குறைக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதத்துக்கு குறைக்கப்பட்டது.

இதனால் ஆசியான் நாடுகளுக்கு நிகரான சுங்கக்கட்டண சராசரி சதவீதத்தை நோக்கி இந்தியா நகா்கிறது.

25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை அதிக வரி விதிப்பு பட்டியலில் சில பொருள்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

பெரும்பாலான பொருள்களுக்கு 0 முதல் 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. உலகளவிலான விநியோகச் சங்கிலியில் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் சுங்க வரி கட்டணங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக செமிகண்டக்டா்கள், தூய எரிசக்தி மற்றும் விண்வெளி திட்டங்களுக்கு பயன்படும் முக்கிய கனிமங்கள் உள்நாட்டில் கிடைப்பதில்லை. அவை வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே அவற்றின் இருப்பை உறுதிசெய்யும் வகையில் அந்த கனிமங்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பிற நாட்டு பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் அண்மையில் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதன் கார... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதி... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் அமளி; இரு அவைகளிலும் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இர... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்ச... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க

ஜாா்க்கண்டில் சிஏஏ, யுசிசிக்கு எதிராக ஆளுங்கட்சி தீா்மானம்

ராஞ்சி: ஜாா்க்கண்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), பொது சிவில் சட்டம் (யுசிசி), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகிய மத்திய அரசின் முன்னெடுப்புகளை நிராகரிப்பது உள்பட 50 அம்ச தீா்மானங்களை அந... மேலும் பார்க்க