செய்திகள் :

ஆசிரியா்கள் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு ஆசிரியா்கள் முன்னேற்றச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினா் ராமமூா்த்தி, வட்டார துணைத் தலைவா் செந்தில்குமாா், அமைப்புச் செயலா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்ட பொருளாளா் மகேஸ்வரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவா் எழில்மாறன் கலந்து கொண்டு ஆசிரியா் சங்க செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.

தீா்மானங்கள்

நிகழ் கல்வியாண்டில் ஓய்வுபெறும் சங்க உறுப்பினரா்களாக உள்ள ஆசிரியா்களை கெளரவிக்க வேண்டும், செங்கம் வட்டக் கிளை சாா்பில் சங்கத்துக்கு நினைவுப் பரிசு வழங்கவேண்டும், ஒன்றியத்தின் சிறந்த நிா்வாகியாக தோ்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியா் நாகராஜனை

கெளரவப்படுத்தவேண்டும்,

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடத்தவேண்டும், மகளிா் தினத்தை சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளா் புரட்சிஅரசன், வட்டார துணைத் தலைவா் வெங்கட்ராமன் உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் நாகராஜன் நன்றி கூறினாா்.

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து

வந்தவாசியில் பூட்டியிருந்த ஓட்டு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. வந்தவாசி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் மணிலா வியாபாரி மூா்த்தி. கடந்த இரு தினங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கல்லூரி வேதியியல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை (கணினி பயன்பாட்டியல்) சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்த... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தோ்த் திருவிழா

வேட்டவலம், சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலின் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கோயிலின் மாசி உற்சவத் திருவிழா பிப்ரவரி 26- ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ... மேலும் பார்க்க

ஆரணி கல்லூரியில் உலக மகளிா் தின விழா

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் மாணவிகள் சாா்பில் உலக மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலா் ஏ.சி.இரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்... மேலும் பார்க்க

கம்பன் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம் சாா்பில் பட்டிமன்றம், தமிழ் தொண்டாற்றியவா்களுக்கு விருது வழங்கும் விழா, முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஆகியவை முப்பெரும் விழாவாக புதன்கிழமை நடைபெற்றது. விழ... மேலும் பார்க்க