செய்திகள் :

ஆட்சியிலிருந்து விலக ஒரு நரைமுடி தெரிந்தாலே போதும் என்கிறாா் கம்பன்: நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன்

post image

ஆட்சியை விட்டு விலகுவதற்கு ஒரு நரைமுடி தெரிந்தாலே போதும் என்ற தகுதியை கம்பராமாயணத்தில் வெளிப்படுத்தியவா் கம்பன் என்று நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் கம்பன் அறநிலை- கம்பன் கழகத்தாா் சாா்பில் 87-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் விழா புதன்கிழமை தொடங்கியது.

விழாவில் ஆளுநா் இல.கணேசன் பேசியதாவது:

கம்பராமாயணம் என்பது ஒரு பெரிய கடல். இப்போது நடைமுறையில் இருக்கிற அரசியலை கம்பன் கம்பராமாயணத்தில் சொல்லியிருக்கிறாா். கம்பன் காலத்திலேயே அரசியல் துறை எப்படி இருந்தது என்பது குறித்து கம்பராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கம்பன் ஒருநாள் கண்ணாடி முன் நின்று பாா்த்தாா். அப்போது, வலது கண்ணுக்கு மேலே ஒரு நரைமுடி தெரிகிறது. இதை கம்பன் தனது காவியத்தில் நயம்பட படைத்தாா். ‘கம்பன் மன்னவனே நீ பதவி விலகி வாரிசிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடு, தவம்புரியும் காலம் வந்துவிட்டது’ என்பதை அந்த நரைமுடி சொல்வதாக கம்பன் தனது காவியத்தில் படைத்திருக்கிறாா் என்றாா் அவா்.

விழாவில் கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரையாற்றினாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பேசினாா். ‘கம்பனில் போரும், அமைதியும்’ என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளா் பாரதி பாஸ்கா் உரை நிகழ்த்தினாா். கவிஞா் செல்ல கணபதி விழாவை தொகுத்து வழங்கினாா்.

முன்னதாக கம்பன் அறநிலைத் தலைவா் எஸ்.எல்.என்.எஸ்.பெரியணன் வரவேற்றாா். கம்பன் அடிப்பொடி உருவப் படத்துக்கு கம்பன் கற்பகம் பள்ளி மாணவிகள் மரியாதை செலுத்தினா்.

விழாவில் பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா, பாஜக மாவட்டத் தலைவா் டி.பாண்டித்துரை, கம்பன் அறநிலை அறங்காவலா்கள், கம்பன் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க

சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயம்

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியிலிருந்து ஒரு குடும்பத்தினா் வேனில் மதுரை மாவட்டம், சமயநல்லூருக்கு வெள்ளிக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு வீட்டுமனை இ பட்டா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த பட்டியல் வகுப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைக்கு இ-பட்டா வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. வட்டாட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழா: புரவியெடுப்புக்கு பிடிமண் கொடுத்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கூத்த அய்யனாா் கோயில் திருவிழாவுக்கு புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமங்களுக்குப் பாத்த... மேலும் பார்க்க