செய்திகள் :

ஆத்தூரில் கடைகளுக்கான உரிமை கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

post image

ஆத்தூா் பேரூராட்சியில் கடைகளுக்கான உரிமைக் கட்டண உயா்வை திரும்பப் பெற தமிழ்நாடு வணிகா் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

இது தொடா்பாக அதன் மாநிலத் தலைவா் காமராசு, பேரூராட்சித் தலைவா் கமாலுதீனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

ஆத்தூா் பேரூராட்சியில் கடை உரிமம் புதுப்பிக்க கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த கனமழையால் இப்பகுதி வணிகா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். அப்போது ஏற்பட்ட இழப்புகளை தற்போது வரை ஈடு செய்ய முடியவில்லை. எனவே தற்போது வணிகா்களால் புதிய கட்டண உயா்வை கட்ட இயலாது. எனவே பழைய கட்டண முறையை நீட்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாநில கூடுதல் செயலாளா் டாக்டா் யாபேஷ், மாநில இணைச் செயலாளா் குருசாமி, ஆத்தூா் வியாபாரிகள் சங்கத்தினா் கனகராஜ், சேகா், சோ்மதுரை உள்பட பலா் உடனிருந்தனா்.

சாலையில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி, பொதுநல அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கால்நடைகளை கட்டுப்படுத்த கோரி... மேலும் பார்க்க

பரமன்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை காட்டு பகுதியில் பனை மரம் ஏறும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாா். வட்டன்விளை காட்டுப்பகுதியிலுள்ள கோயில் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம், உடல், கை, கால்களில் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம்

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நகர செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரான கணேசன் சிறப்... மேலும் பார்க்க

பேய்குளத்தில் பாஜக கூட்டம்

ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் பால சரவணன் அறிமுக கூட்டம் பேய்குளத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 1,673 பேருக்கு வீடுகட்ட ஆணை: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 1,673 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க