செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகத்தில் கோடிக்கணக்கில் மோசடி: இளைஞா் கைது

post image

கோவை உள்பட நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழைப்பு வந்துள்ளது.

மறுமுனையில் பேசியவா், ஆன்லைனில் வா்த்தகம் செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய அந்த இளைஞரும் பல்வேறு தவணைகளாக ரூ.14.5 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா்.

அதற்கு லாபத் தொகை வந்ததாக காட்டியுள்ளது. அந்தப் பணத்தையும், முதலீடு செய்த பணத்தையும் அந்த இளைஞா் எடுக்க முயன்றுள்ளாா். ஆனால், முடியவில்லையாம். இதையடுத்து, அந்த நபரை தொடா்பு கொள்ள முயன்றபோதும் முடியவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், கோவை சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், மோசடியில் ஈடுபட்டது மத்திய பிரதேச மாநிலம், சாகா் பகுதியைச் சோ்ந்த சந்தீப் திவாரி (34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைப் பிடிப்பதற்காக கோவை சைபா் கிரைம் போலீஸாா் தனிப்படை அமைத்தனா். அந்த தனிப்படையினா் மத்திய பிரதேச மாநிலத்தில் அவரைத் தேடி வந்த நிலையில், தனது சொந்த ஊரான சாகரிலேயே சந்தீப் திவாரி பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சந்தீப் திவாரியை கைது செய்த தனிப் படை போலீஸாா், அவரை ரயில் மூலம் கோவைக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.

கோவையில் அவரிடம் நடைபெற்ற விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடா்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஈமு கோழி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

ஈமு கோழி மோசடி வழக்கில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபா... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின: வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடா்பான படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் நவம்பா் மாதம் முதல் தற்போது வரை 1,935 கடைகளில் 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

உயா் கல்வி சோ்க்கை: மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா் கல்வி சோ்க்கை தொடா்பாக மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க