செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு விரைவில் வெளிநாடுகளுக்கு பயணம் - மத்திய அரசு

post image

புது தில்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை விரைவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி பாகிஸ்தான் விவகாரத்தில் சர்வதேச ஆதரவு கோர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீதான இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பதை உலக நாடுகளுக்கு வெளிக்காட்ட ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான யோசித்து வருகிறது.

அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் எதிர்க்கட்சிகளிலிருந்தும் எம்.பி.க்களைச் சேர்த்து குழுவொன்றை அமைத்து இந்தியாவின் பிரதிநிதிகளாக அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த குழுவில் சசி தரூர், அசாதுதீன் ஓவைசி, பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் இடம்பெறலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல அரபு நாடுகளுக்கு இந்த குழுவினர் சென்று, அங்குள்ள தலைவர்களிடமும் முக்கிய உயரதிகாரிகளிடமும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பர். குறிப்பாக, 'ஆபரேஷன் சிந்தூர்’ பற்றியும், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புகள் மீதான இந்தியாவின் நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளிப்பதுடன் இந்தியாவுக்கு சர்வதேச தரப்பிலிருந்து ஆதரவையும் கோருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிடம், இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை நடத்திட பாகிஸ்தான் பெரும் பங்களிப்பு செய்வதைப் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய ஆவணங்களுடன் போதுமான ஆதாரங்கள் பகிரப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உலக நாடுகளுடனான இந்தியாவின் தூதரக ரீதியிலான நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை அமைய உள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இனி இந்தியாவின் புதியதொரு இயல்புநிலை நடவடிக்கையாகவே ’ஆபரேஷன் சிந்தூர்’ அமையும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்ட நிலையில், இதனை வெளிநாடுகளிடம் வலியுறுத்தி ஆதரவு கோருவது, மேற்கண்ட திட்டத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.

சசி தரூர் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவொன்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கும், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான குழு - சவூதி அரேபியா மற்றும் கத்தாருக்கும் மற்றும் பிற நாடுகளுக்கும் 10 நாள் பயணமாக செல்லவுள்ளனர். இந்த குழுவில் குறைந்தபட்சம் 5 எம்.பி.க்கள் இடம்பெறுவதை அரசு உறுதி செய்துள்ளது. அதிக எம்.பி.க்கள் இடம்பெறுவதையும் அரசு வரவேற்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு விவகார அமைச்சகத்தின் உயரதிகாரியொருவரும் எம்.பி.க்களுடன் வெளிநாடுகளுக்கு செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 7 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 7 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மக்களை மிரட்டி பணம் பறித்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 கிளர்ச்சி... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பூஞ்ச் ​​பகுதி கிராமங்களில் இந்திய ராணுவம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.நிவாரணப் பணி... மேலும் பார்க்க

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!

புதிய சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித் தீர்த்த கோடைமழை.. வெப்பம் தணிந்தது!

மும்பை: மும்பையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இத்தனை நாள் வாட்டி வந்த வெப்பம் தணிந்துள்ளது. மும்பை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று நாள் முழுக்க மும்பை நகரில்... மேலும் பார்க்க

அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

அமெரிக்கா மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவ... மேலும் பார்க்க

பிகாரில் கயா நகரின் பெயரை மாற்றியது நிதீஷ் குமார் அரசு

பாட்னா: மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் கயா நகரின் பெயர் இனி கயா ஜி என்றே அழைக்கப்படும் என்று பிகார் அரசு அறிவித்துள்ளது.பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்த... மேலும் பார்க்க