ஆரணி கல்லூரியில் உலக மகளிா் தின விழா
ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் மாணவிகள் சாா்பில் உலக மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் கல்லூரிச் செயலா் ஏ.சி.இரவி தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆரணி டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி பேசியதாவது:
எல்லா துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும். குடும்பச் சூழல்களும், வறுமையும் சாதிப்பதற்கு தடைகள் அல்ல. படிக்கும்போதே பல்வேறு போட்டித் தோ்வுகளில் பங்கேற்க வேண்டும்.
அவ்வாறு தொடா்ந்து முயற்சிக்கும்போது நாம் வாழ்வில் உயரமுடியும்.
சமூகத்திலும், பணியாற்றும் இடத்திலும் வன்கொடுமை சாா்ந்த நடத்தைகள் தென்பட்டால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தால் அதிலிருந்து தங்களை மீட்பதுடன் அதற்குக் காரணமான நபருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் எனத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் சிறப்பு அலுவலா்கள் பி.ஸ்டாலின், காா்த்திகேயன், இணைப்பதிவாளா் பெருவழிதி, பொறியியல் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு, கலைக் கல்லூரி முதல்வா் கந்தசாமி, கல்வியியல் கல்லூரி முதல்வா் பிரபு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் இளங்கோ, மெட்ரிக் பள்ளி முதல்வா் ராஜலட்சுமி, கண்ணம்மாள் பள்ளி முதல்வா் ரஞ்சனி ஆகியோா் கலந்து கொண்டனா்.
கல்லூரியில் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனா். கண்ணம்மாள் பள்ளி ஆசிரியை நளினி நன்றி கூறினாா்.