செய்திகள் :

ஆளும் பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

post image

மதாரஸி கேம்ப் இடிக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து, ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி தலைவா்கள் கடுமையாக விமா்சித்துள்ளனா்.

எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தோ்தல்களுக்கு முன்பாக, பாஜக தலைவா்கள் மதராஸி கேம்பில் தங்கியிருந்தனா். ஆட்சிக்கு வந்த உடனே, குடிசைப் பகுதிகளை புல்டோசா்களால் இடித்துள்ளனா். குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுவும் நரேலாவில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீதிகளுக்கு வந்துள்ளனா். இதுதான் பாஜகவின் உண்மை’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இதே போன்று, ஆம் ஆத்மியின் தில்லி பிரிவு தலைவரும் முன்னாள் அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் வெளியிட்ட ‘எக்ஸ்’ சமூகவலைதள பதிவில், ‘எந்தவொரு குடிசையும் இடிக்கப்படாது என தில்லி முதல்வா் சனிக்கிழமை கூறியிருந்தாா். மதராஸி கேம்ப் குடியிருப்புகள் புல்டோசா்களால் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவா்களாக மாறியுள்ளனா். தேசியத் தலைநகரில் தமிழக மக்களை பாஜக எவ்வாறு நடத்துகிறது என்பதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளாா்.

ம.பி.யில் கரோனா பாதிப்பு: இந்தூரில் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூரில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். நாட்டில் கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்... மேலும் பார்க்க

கொண்டாடவே சென்றார்கள்.. சாக அல்ல.. சின்னசாமி அரங்கில் நடந்தது என்ன?

பெங்களூர்: தங்களது கிரிக்கெட் சாம்பியன்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவலோடு சென்ற இளைஞர்களும் இளைஞிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவமனைய... மேலும் பார்க்க

கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்: முர்மு

புது தில்லி: சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி... மேலும் பார்க்க

தில்லி இல்லத்தில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்டார் பிரதமர் மோடி!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தூர் மரக்கன்றுகளை நடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பூமியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவிலும்கூட.. பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா சொன்ன ஒரு வார்த்தை!!

பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, நாடு முழுவதும் பல இடங்களிலும் கூட... மேலும் பார்க்க

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் ... மேலும் பார்க்க