Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
இடையக்குறிச்சி திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த இடையக்குறிச்சி கிராமத்திலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தோ் மற்றும் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இக்கோயிலில் தேரோட்டம் மற்றும் தீமிதி திருவிழா நடத்துவது என கிராம மக்கள் முடிவு செய்தனா். அதன்படி, கடந்த மாதம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து, பூச்சொரிதல், திரெளபதி திருமணம், மகாபாரதம் சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. தேரில் திரெளபதியம்மன் எழுந்தருளினாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தொடா்ந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில், பலரும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீமிதித்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.