செய்திகள் :

`இது ஃபெயிலான சட்டமன்றம்' - அதிமுக எம்.எல்.ஏ கமென்ட்; சூடான சபாநாயகர்! - என்ன நடந்தது?

post image

2021 தேர்தல் அறிக்கையில், ‘ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படும்’ என தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் 150 நாள்களுக்கு குறைவாகத்தான் சட்டமன்றம் கூட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த இரண்டு வாரமாக சட்டமனறத்தில் நடந்து வருகிறது. அதில் பேசிய பெருந்துறை அ.தி.மு.க எம்.எல்.ஏ ஜெயக்குமார், தனது தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்றம்

தொடர்ந்து பேசிய அவர், “ எங்களை போன்ற புதுமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி மக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து அவையில் பேசி அதற்கு தீர்வு காணலாம் என்ற ஆவலோடு இந்த அவைக்கு வந்தோம். ஆனால், ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டமன்றம் நடைபெறும் எனவும் தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்திருந்தது. அதன்படி, 500 நாள்கள் சட்டமன்றத்தை நடத்திருக்கவேண்டும். ஆனால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரையும் சேர்த்து 148 நாள்கள்தான் அவையை நடத்தி போகிறீர்கள். 10 வகுப்பு மாணவர்களுக்குகூட 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.

ஒருபாடத்துக்கு 35 மார்க் எடுத்தால்தான் தேர்ச்சி பெறமுடியும். அதன்படி, வெறும் 30 மார்க் எடுத்து இந்த அவை தேர்ச்சி பெறவில்லை. ஃபெயிலான சட்டமன்றம் இது.” என்றிருந்தார். ஜெயக்குமாரின் இந்த கருத்தை, அப்போது அவையில் இருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

சபாநாயகர் அப்பாவு

இதற்கு சபாநாயகர் அப்பாவு பதிலளித்து பேசுகையில், “ இவை எல்லாமே அனைத்து கட்சி கூட்டம் கூட்டித்தான் முடிவெடுத்திருக்கிறோம். அ.தி.மு.க தலைவர்களும் பேசிதான் முடிவெடுத்திருக்கிறோம். தனிப்பட்ட முறையில் அல்ல. கொரோனா... மழை வெள்ளம்... தேர்தல் போன்ற காரணங்களால்தான் அவையின் நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. வேண்டுமென்று திட்டமிட்டு நடத்தக் கூடாது என்ற நோக்கமில்லை.” என்றார் சூடாக.

'ஆரோக்கியமாகவும், உயிருடனும்' - கைலாசா அறிவிப்பு; KGF பி.ஜி.எம் உடன் என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா

நித்தியானந்தாவை சுற்றி சர்ச்சை ஓயவே ஓயாது போல. தொடர் வழக்குகளால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, 'கைலாசா' என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அங்கிருந்து பேசுவதாகவு... மேலும் பார்க்க

'ஈரான் மீது குண்டு வீசப்படும்' - ட்ரம்ப் மிரட்டலின் பின்னணி?

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம்தான் ஆணு ஆயுதங்கள் இருக்கின்றன. பிற நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இல்லை. அவை ஐ.நா-வின் அணு ஆயுத பரவல்... மேலும் பார்க்க

ஒன் பை டூ

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க“உண்மை நிலவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். மூன்று கோடிக் கட்சித் தொண்டர்கள், 52 வருட அரசியல் கட்சி, 30 வருட ஆட்சிப் பொறுப்பு என்று தமிழக அரசியலில் மட்... மேலும் பார்க்க

`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ... மேலும் பார்க்க

'இதுவரை அரசு பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - அன்பில் மகேஸ் பெருமிதம்

தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வேகமாக நடந்து வருவது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பவதாவது..."தமிழ்நாடு முழுவதும் அரச... மேலும் பார்க்க

'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும் கார்த்தி சிதம்பரம்

சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்... மேலும் பார்க்க