செய்திகள் :

இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?

post image

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) கீழ் இயக்கப்படும் இந்தியாவின் முதல் தனியார் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த நிலையம் தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டாலும், உரிமை இந்திய ரயில்வேயிடமே உள்ளது. தனியார் ஏன் நிர்வகிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்,

சர்வதேச அளவில் ரயில் நிலையங்களை மாற்ற தனியாரின் உதவிகளும் பெறப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே ஸ்டேஷன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் எட்டு ரயில் நிலையங்களை புதுப்பித்து வருகிறது. சண்டிகர், போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச், புனேவில் உள்ள சிவாஜி நகர், புதுடெல்லியில் பிஜ்வாசன் மற்றும் ஆனந்த் விஹார், குஜராத்தில் சூரத், பஞ்சாபில் எஸ்ஏஎஸ் நகர் (மொஹாலி) மற்றும் குஜராத்தில் காந்தி நகர் ஆகியவை இதில் அடங்கும்.

மத்தியப் பிரதேச மாநிலம் தலைநகர் போபாலின் ஹபீப்கஞ்சில் அமைந்துள்ள ரயில் நிலையம், பொதுமக்களுக்காக திறக்கப்பட்டு,நாட்டின் முதல் தனியார் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தின் படி, இந்த ரயில் நிலையம் தனியார் பங்களிப்புடன் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையம் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இங்கு ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள் உள்ளன. மேலும் இந்த நிலையம் முற்றிலும் சூரிய சக்தியாலேயே இயங்குகிறது. ஓய்வு அறைகள் மற்றும் தங்குமிடங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

2021 ஆம் ஆண்டில், ஹபீப்கஞ்ச் நிலையம் ராணி கமலாபதி நிலையம் என மறுபெயரிடப்பட்டது. போபாலின் கடைசி இந்து ராணியாக இருந்த ராணி கமலாபதியின் நினைவாக இந்த ரயில் நிலையம் பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இந்த சம்மருக்கு குடும்பத்துடன் செல்ல சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

கோடைகாலம் ஆரம்பித்தவுடன் குளிர்ச்சியான இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோம். அதுவும் குறிப்பாக பக்கத்தில் இருக்கும் ’ஊட்டி’ தான் உடனே நம் நினைவிற்கு வரும். ஊட்டியில் பார்க்க தாவரவியல... மேலும் பார்க்க

மணிகரண்: 24 மணிநேரமும் கொதிக்கும் இயற்கை வெந்நீர் ஊற்று; சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது ஏன்?

பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புனிததலம் தான் மணிகரண். இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. வெந்நீர் ஊற்றில் இயற்கையாகவே தண்ணீர் சூடாக கொதித்துக் கொண்டே இருக்குமாம்.இதனைப் பார்க்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக... மேலும் பார்க்க

நாகலிங்க வடிவில் அற்புத பாறை! மாதேஸ்வர மலைப் பயணம் குறித்து தெரியுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Passport: மத்திய அரசின் புதிய விதிமுறைகள்... இனி பாஸ்போர்ட் பெற இந்த சான்றிதழ் கட்டாயம்!

டிரிப், படிப்பு, வேலை... - எதற்கு வெளிநாடு செல்ல வேண்டுமானாலும், பாஸ்போர்ட் மிக அவசியம். சுற்றுலா முதல் அலுவல் நிமித்தமாக பல லட்ச மக்கள் இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.... மேலும் பார்க்க

Tour: கோடையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறீர்களா - இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களாக இருந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் தனியார் வாகனங்களில் சுற்றுலா செல்ல இ-பாஸ் நடைமுற... மேலும் பார்க்க

₹ 1 -க்கு இவ்வளவு மதிப்பா? இந்திய ரூபாய் வைத்திருந்தால் இந்த நாடுகளில் நீங்கள் பணக்காரர் தான்!

சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிடும் போது பணம் குறித்த கவலைகள் தான் நம் நினைவிற்கு உடனே வரும். நம் ஊரில் அதன் மதிப்பு வேறு, வெளிநாடுகளில் அதன் மதிப்பு வ... மேலும் பார்க்க