செய்திகள் :

இந்தியாவுக்கு எதிராக இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்: முன்னாள் இங்கிலாந்து வீரர்

post image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஜியாஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதையும் படிக்க: டெஸ்ட்டில் கேப்டனாகும் விருப்பம் இருக்கிறது: ஜடேஜா

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் ஸாக் கிராலி மற்றும் ஆலி போப் சிறப்பாக செயல்பட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜியாஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

ஸாக் கிராலி மற்றும் ஆலி போப் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படத் தவறி வருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களிலும் ஸாக் கிராலி, வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றியிடமே ஆட்டமிழந்தார். அந்த தொடரில் அவரது சராசரி 9-க்கும் குறைவாகவே இருந்தது.

இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரரான ஆலி போப்புக்கும் கடந்த ஆண்டு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 196 ரன்கள் எடுத்து அசத்தினார். அதன் பின், அவரால் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி ரன்கள் குவிக்க முடியவில்லை.

ஸாக் கிராலி மற்றும் ஆலி போப் குறித்து ஜியாஃப்ரி பாய்காட் பேசியதாவது: ஸாக் கிராலி மற்றும் ஆலி போப் இருவரும் அவர்கள் பேட்டிங்கில் செய்யும் தவறுகளுக்கு தீர்வினைக் கண்டுபிடித்துவிட்டனர் எனக் கூறமுடியாது. ஏனெனில், ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு மிகவும் சராசரியாக இருந்தது. ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர்கள் மிதவேக பந்துவீச்சாளர்களே. அதனால், அவர்களுக்கு எதிராக ஸாக் கிராலி மற்றும் ஆலி போப் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளவில்லை.

இதையும் படிக்க: ஷ்ரேயாஸை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாததில் எனக்கு பங்கில்லை: கம்பீர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இந்த தொடரில் இவர்கள் இருவரும் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்தியாவுக்கு எதிராக இவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதிலேயே உண்மையான சவால் அடங்கியுள்ளது என்றார்.

அண்மையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஸாக் கிராலி 124 ரன்களும், ஆலி போப் 171 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய கால்பந்து கழகத் தலைவரைச் சந்தித்த ஜெய் ஷா..! கிரிக்கெட் - கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஐரோப்பிய கால்பந்து கழகத் தலைவர் அலெக்சாண்டர் செஃபெரினைச் சந்தித்தார். பிசிசிஐ செயலராக கடந்த 5 ஆண்டுகளாக பதவி வகித்த ஜெய் ஷா கடந்த டிச.2024 முதல் ஐசிசியின் புதிய தலைவராகப் பொறுப்பே... மேலும் பார்க்க

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம்: ஜஸ்பிரித் பும்ரா

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இந... மேலும் பார்க்க

ஹாரி புரூக் தலைமையில் முதல் போட்டி: இங்கிலாந்து சாதனை வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிக... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: மே.இ.தீவுகளுக்கு எதிராக 400 ரன்கள் குவித்து இங்கிலாந்து அபாரம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 400 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் கேப்டனாகும் விருப்பம் இருக்கிறது: ஜடேஜா

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட்டில் 2012-இல் இங்கிலாந்து எதிரான போட்டியில் அறிமுகமானார். தற்போது, ஐசிசி ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாததில் எனக்கு பங்கில்லை: கம்பீர்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸை தேர்வு செய்யாமல் இருக்க தான் காரணமில்லை என இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்குச் சென்று 5 டெஸ்ட் போட்... மேலும் பார்க்க