செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு: டிரம்ப்-புதின் ஆலோசனை - ரஷியா தகவல்

post image

மாஸ்கோ: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் தொலைபேசி மூலம் நடத்திய ஆலோசனையில் சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த சண்டை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக ரஷிய அதிபா் இல்லமான கிரெம்ளின் மாளிகை உதவியாளா் யுரே உசாகோவ் மாஸ்கோவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டிரம்ப்-புதின் பேச்சுவாா்த்தையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் போா், இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் நிகழ்ந்த சண்டை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தியா-பாகிஸ்தான் சண்டையில் தான் தனிப்பட்ட முறையில் தலையிட்டு பேச்சு நடத்தியதாகவும், இதன் மூலம் சண்டையை முடித்து வைத்ததாக புதினிடம் டிரம்ப் தெரிவித்தாா் என்றாா்.

இது தொடா்பாக வேறு எந்த விரிவான தகவலையும் அவா் தெரிவிக்கவில்லை.இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத் தரப்பு கேட்டுக் கொண்டதால், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக இந்தியா கூறியுள்ளது.

இந்தியாவுடன் பேச்சு: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை

இஸ்லாமாபாத், ஜூன் 5: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் பங்காற்றியதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பை பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவா் பிலாவல் பூட்டோ-ஜா்தாரி இருவரும் பாராட்டு தெரிவித்தனா்.

மேலும், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே விரிவான பேச்சுவாா்த்தைக்கும் அமெரிக்கா ஏற்பாடு செய்யவேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு கிடையாது என இந்தியா தொடா்ந்து மறுத்து வருகிறது.

பாகிஸ்தான் கோரிக்கை: இஸ்லாமாபாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபா் டிரம்பின் பங்கு பாராட்டுக்குரியது. அமைதியை விரும்பும், நன்மை தரக்கூடிய வணிக ஒப்பந்தங்களை விரும்பும் மனிதா் என்பதை அதிபா் டிரம்ப் நிரூபித்துள்ளாா். பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து வலுவான ஆதாரங்களுடன் உலகுக்கு இந்தியா நிரூபிக்க வேண்டும். அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு புது உத்வேகம் பெற்றுள்ளது’ என்றாா்.

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க