செய்திகள் :

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால்... புஜாரா கூறுவதென்ன?

post image

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது குறித்து புஜாரா பேசியுள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வாகவில்லை. அவர் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தார்.

இதையும் படிக்க: முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கான அணியில் புஜாரா இடம்பெறவில்லை.

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால்...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், அது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும் என புஜாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். இந்திய அணிக்காக விளையாடுவதை நான் விரும்புகிறேன். அதே நேரத்தில், அணியில் இடம்பெறுவோமா? மாட்டோமா? என அதிகம் யோசிக்கவும் மாட்டேன். நிகழ்காலத்தில் இருப்பதையே நான் விரும்புகிறேன்.

இதுவரை இந்திய அணிக்காக விளையாடிய எனது கிரிக்கெட் பயணம் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. என்னுடைய இந்த கிரிக்கெட் பயணத்தில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. கிரிக்கெட்டை நான் மிகவும் நேசித்து விளையாடுகிறேன். மகிழ்ச்சியாக என்னால் எவ்வளவு காலம் விளையாட முடிகிறதோ அதுவரை விளையாடுவேன். நான் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுகிறேன். என்னுடைய உடல்தகுதியிலும் கவனமாக இருக்கிறேன் என்றார்.

இதையும் படிக்க: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்த மற்றொரு வாய்ப்பு!

இந்திய அணிக்காக இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 7195 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 43.60 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாரி புரூக் தலைமையில் முதல் போட்டி: இங்கிலாந்து சாதனை வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிக... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: மே.இ.தீவுகளுக்கு எதிராக 400 ரன்கள் குவித்து இங்கிலாந்து அபாரம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 400 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிராக இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்: முன்னாள் இங்கிலாந்து வீரர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஜியாஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் கேப்டனாகும் விருப்பம் இருக்கிறது: ஜடேஜா

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட்டில் 2012-இல் இங்கிலாந்து எதிரான போட்டியில் அறிமுகமானார். தற்போது, ஐசிசி ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாததில் எனக்கு பங்கில்லை: கம்பீர்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸை தேர்வு செய்யாமல் இருக்க தான் காரணமில்லை என இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்குச் சென்று 5 டெஸ்ட் போட்... மேலும் பார்க்க

வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடாதீர்கள்: முன்னாள் ஆஸி. கேப்டன்

வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான 14 வயது இளம் வீ... மேலும் பார்க்க