செய்திகள் :

இந்திய அணி அழுத்தத்திலிருந்து விடுபட இதனை செய்ய வேண்டும்: முன்னாள் ஆஸி. கேப்டன்

post image

ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பேசியுள்ளார்.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுவதால் இந்த இரண்டு அணிகளின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி, இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று, உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள முதல் போட்டி அந்த அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என நினைக்கிறேன். ஏனெனில், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், சொந்த மண்ணில் விளையாடுகிறோம் என்ற இந்திய அணியின் அழுத்தத்தை அது போக்கிவிடும். இலங்கைக்கு எதிராக சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தால், இந்திய அணியின் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரித்துவிடும். சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடர்கள் நடைபெற்றால், அணிகளின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக இருக்கும் என்றார்.

இதற்கு முன்பாக, கடந்த 1978, 1997 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. மீண்டும் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடர் என்பதால், முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்றாக வேண்டும் என்ற கனவுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

31 வயதாகும் மெக் லேனிங் கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் 8000-க்கும் அதிகமான ரன்களை அவர் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The former Australian captain has spoken about what the Indian team needs to do to overcome the pressure of playing on home soil in the ICC World Cup.

இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வு கேட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர்!

இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருக்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்று கொடுப்பவர்கள் என தங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியுடன் இணைவது எப்போது? அஜித் அகர்கர் பதில்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயத்திலிருந்து மீண்டு எப்போது அணியுடன் மீண்டும் இணைவார் என்பது குறித்து இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் பேசியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள்... மேலும் பார்க்க

கருண் நாயரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா? - அஜித் அகர்கர் சூசகம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறித்து அணித் தேர்வர் அஜித் அகர்கர் சூசகமாக பதிலளித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க

சென்னை டூ சிட்னி..! அஸ்வினை வரவேற்று விடியோ வெளியிட்ட சிட்னி தண்டர்!

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் இணைந்ததை வரவேற்று சிட்னி தண்டர் அணி விடியோ வெளியிட்டுள்ளது.இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் போன்று ஆஸ்திரேலியாவில் ந... மேலும் பார்க்க

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வு கேட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனக்கு 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி இன்ற... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழர்கள் சேர்ப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஷுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் அக்.2 முதல் அக்.14ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இந்தியாவுக... மேலும் பார்க்க