செய்திகள் :

இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!

post image

மே.இ.தீ. அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் தந்தையாக கருதப்படும் ஆண்டி ராபட்ஸ் ஐசிசியின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியமாக அல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி ஒரே திடலில் விளையாடியது மிகப்பெரிய சர்ச்சை ஆனது. இந்திய அணியும் இறுதிப் போட்டியில் வென்றது.

மற்ற அணிகள் பாகிஸ்தான், துபை என மாறிமாறி விளையாடியது இந்திய அணி துபையில் விளையாடியது மோசடி என பலரும் குற்றம் சுமத்திய வேளையில் மே.இ.தீ. லெஜெண்ட் ஆண்டி ராப்ட்ஸ் கூறியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆஸி. கேப்டன், தென்னாப்பிரிக்க வீரர்கள், பாகிஸ்தான் வீரர்கள் என பலரும் துபையில் விளையாடுவது இந்தியாவுக்கு ஆதாயம் எனக் கூறினார்கள். ஆனால், ஷமியை தவிர இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் யாரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி- இல்லை என்று சொல்லிப் பழக வேண்டும்

அவர் கூறியதாவது:

ஐசிசி இந்தியாவுக்கு இல்லை என்று சொல்லிப் பழக வேண்டும். கடந்த டி20 உலகக் கோப்பையிலும் அரையிறுதிப் போட்டி எங்கு விளையாடுகிறார்கள் என முன்னமே தெரிந்தது இந்தியாவுக்கு ஆதாயமாக இருந்தது.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா எங்குமே பயணிக்கவில்லை. ஒரு தொடரில் எப்படி ஓர் அணி மட்டும் எங்குமே பயணிக்காமல் இருக்க முடியும்?

ஐசிசி- இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படுகிறது

இது நியாயமானதல்ல, இது கிரிக்கெட். இந்தியாவிலிருந்து அதிகமான பணம் கிடைக்கிறதுதான் ஆனால், கிரிக்கெட் ஒரு நாட்டுக்காக மட்டும் இருக்கக் கூடாது. தற்போது கிரிக்கெட் ஒரு நாட்டுக்காக மட்டுமே விளையாடுவதாக இருக்கிறது.

ஐசிசி என்பது இந்தியன் கிரிக்கெட் வாரியமாக இருக்கிறது. இந்தியாதான் அனைத்தையும் ஆணையிடுகிறது.

கிரிக்கெட்டில் வைடு, நோ பால் அனைத்தையும் நீக்கிவிடலாமென இந்தியா கூறினால் நாளையே ஐசிசி இந்தியாவை திருப்தி செய்ய அதனை நிறைவேற்றும் என்றார்.

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி வ... மேலும் பார்க்க

சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கா... மேலும் பார்க்க

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக்: இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றமடைந்துள்ளது. மார்ச்.1 முதல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஆஸ... மேலும் பார்க்க

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் சர்மா, ரச்சின் அதிரடி முன்னேற்றம்! கோலிக்கு சரிவு!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வா... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன்! -ஷ்ரேயஸ்

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அசத்தலாக வி... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சகோதரி திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் அணியினர் கலந்துகொண்டு நடனமாடிய விடியோக்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது.12 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிர... மேலும் பார்க்க