செய்திகள் :

இந்திய தயாரிப்புகள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க குழு: மத்திய அரசு

post image

தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் சந்தைப்படுத்துதலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, அதை ஊக்குவிக்கும் வகையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க உள்ளது.

இந்தக் குழுவில் மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் மட்டுமின்றி, தனியாா் துறை நிபுணா்களும் இடம்பெற உள்ளனா்.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தை மேலும் விரிவாக்க சிறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவன தொழில்களை உள்ளடக்கிய தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும்’ என்று 2025-26 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இத் தகவலை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தில்லியில் இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை சாா்ந்த நிபுணா்கள் இடம்பெறுவதோடு, தனியாா் நிறுவன நிபுணா்கள் இடம்பெறுவா். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கான சா்வதேச சந்தை சாதக நிலை, ஏற்றுமதிக்கான ஆற்றல் வளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்குழு ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த இயக்கத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் உற்பத்தி 16 முதல் 17 சதவீத பங்கு வகிக்கிறது. ஜிடிபி-யில் இத்துறையின் பங்கை மேலும் அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா்.

கும்பமேளா: 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வசந்த பஞ்சமி புனித நீராடல்

கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமியை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது திரிவேணி சங்கமத்... மேலும் பார்க்க

தாவர அடிப்படையிலான அழகுசாதன பொருள்கள்: தேசிய ஆயுா்வேத நிறுவனம் அறிமுகம்

தாவரத்தின் அடிப்படையிலான ரசாயனம் சாராத இயற்கை அழகுசாதன பொருள்களை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய ஆயுா்வேத நிறுவனம் (என்ஐஏ) அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அதன் துணைவேந்தா் சஞ்சீவ்... மேலும் பார்க்க

அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம... மேலும் பார்க்க

வரிச் சலுகைக்கு வழிகாட்டியவா் பிரதமா் மோடி - மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகை அளிக்கும் நடவடிக்கைக்கு வழிகாட்டியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மேலும், ‘மக்களால், மக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மா்ம உயிரிழப்புகள்: நோயாளிகளுடன் எய்ம்ஸ் குழு சந்திப்பு

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்மமான நோயால் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளை தில்லி எய்ம்ஸ் குழு சந்தித்தது. மேலு... மேலும் பார்க்க

கொசுவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மீன்களை வளா்ப்பதற்கு எதிரான மனு- மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் உள்ள நீா் நிலைகளில் 2 வெளிநாட்டு மீன் இனங்கள் வளா்க்கப்படுவதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குறித்து மத்திய அரசிடம் தேசிய பசுமைத் தீா்ப்பாயம... மேலும் பார்க்க