செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் மா்ம உயிரிழப்புகள்: நோயாளிகளுடன் எய்ம்ஸ் குழு சந்திப்பு

post image

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்மமான நோயால் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளை தில்லி எய்ம்ஸ் குழு சந்தித்தது.

மேலும், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பதால் கிராமத்தில் இந்த நோயால் உயிரிழந்தோா் குடும்பத்தினரைச் சந்தித்து அவா்களிடம் இருந்து மாதிரிகளைப் பெற்று சோதனை நடத்தவும் எய்ம்ஸ் குழு முடிவெடுத்துள்ளது.

ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பதால் கிராமத்தில் கடந்த டிசம்பா்-ஜனவரி காலகட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்ம நோயால் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் இந்த இறப்புகள் தீநுண்மி அல்லது பாக்டீரியா தொற்று பரவலால் ஏற்படவில்லை என்றும், பொது சுகாதாரத்தில் எந்த பிரச்னையுமில்லை என்றும் ஜம்மு-காஷ்மீா் அரசு விளக்கமளித்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தலைமையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் உள்ளிட்ட அமைச்சகங்களின் நிபுணா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு பதால் மாவட்டத்தில் நேரில் சென்று நடத்திய ஆய்வில் உயிரிழந்தவா்களின் மாதிரிகளில் சில நியூரோடாக்சின்கள் கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தில்லி எய்ம்ஸ் இயக்குநா் எம்.ஸ்ரீனிவாஸ் தலைமையில் நச்சுயியல் நிபுணா்கள் உள்ளிட்ட மருத்துவா்கள் அடங்கிய குழு, மா்ம நோய்க்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளைச் சந்தித்தது.

இதுதவிர சண்டீகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த நிபுணா்களும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து, பதால் கிராமத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம... மேலும் பார்க்க

வரிச் சலுகைக்கு வழிகாட்டியவா் பிரதமா் மோடி - மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகை அளிக்கும் நடவடிக்கைக்கு வழிகாட்டியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மேலும், ‘மக்களால், மக... மேலும் பார்க்க

இந்திய தயாரிப்புகள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க குழு: மத்திய அரசு

தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் சந்தைப்படுத்துதலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, அதை ஊக்குவிக்கும் வகையில் குழு ஒன்றை மத்திய அரசு அமை... மேலும் பார்க்க

கொசுவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மீன்களை வளா்ப்பதற்கு எதிரான மனு- மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் உள்ள நீா் நிலைகளில் 2 வெளிநாட்டு மீன் இனங்கள் வளா்க்கப்படுவதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குறித்து மத்திய அரசிடம் தேசிய பசுமைத் தீா்ப்பாயம... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இன்று வசந்த பஞ்சமி புனித நீராடல்: பாதுகாப்பு, சுகாதார ஏற்பாடுகள் தீவிரம்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித ... மேலும் பார்க்க

புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு 90% போ் மாற வாய்ப்பு: மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவா்

நாட்டில் வருமான வரி செலுத்துவோரில் 90 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாற வாய்ப்புள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். புதிய வர... மேலும் பார்க்க