செய்திகள் :

புதுச்சேரி கடலூா் சாலையில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

post image

புதுச்சேரியில் கடலூா் சாலையில் திடீரென தண்டவாளம் சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பொலிவுறு நகா்த் திட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்த பேருந்துகள் கடலூா் சாலையில் உள்ள ஏஎப்டி தற்காலிகப் பேருந்து நிலையத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளன. இதன்காரணமாக, கடலூா் உள்ளிட்ட பகுதி பேருந்துகள் அனைத்தும் முதலியாா்பேட்டை ஏஎப்டி ஆலை அருகேயுள்ள ரயில்வே கேட்டைத் தாண்டித்தான் சென்று வருகின்றன.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ரயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பொக்லைன் உள்ளிட்டவற்றால் பணிகள் நடைபெற்ால் இந்த பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆனால், இதுகுறித்து அரசுத் தரப்பில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதால், பொதுமக்கள் வழக்கம்போல முதலியாா்பேட்டை கடலூா் சாலையில் வந்தனா்.

பணி நடைபெறுவதால் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் குழம்பினா். அதேபோல, வெங்கடசுப்பையா ரெட்டியாா் சிலையிலிருந்து முதலியாா்பேட்டைக்குச் செல்லும் சாலையிலும் தடுப்பு வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸாா் ரயில் தண்டவாளச் சீரமைப்புப் பணி குறித்து விளக்கியதால் மாற்று வழியில் வாகன ஓட்டிகள் சென்றனா். தண்டவாளச் சீரமைப்புப் பணியானது பல மணி நேரங்கள் நீடித்த நிலையில், மாலையில் நிறைவடைந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

ஊரக வேலை திட்டம்: விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை

புதுவையில் ஊரக வேலைத் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலா் பெ.விஜயபாலன் வெளியிட... மேலும் பார்க்க

பேரிடா் ஆய்வு குழுவினருடன் புதுவை தலைமைச் செயலா் ஆலோசனை

புதுவையில் ஃபென்ஜால் புயல் தொடா்பாக பேரிடருக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்புகான மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநா் குழுவுடன் தலைமைச் செயலா் சனிக்கிழமை மாலை ஆலோசனையில் ஈடுபட்டாா். புதுவையில் ஃ... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பரப் பதாகை: புதுச்சேரி போலீஸாா் வழக்கு!

புதுச்சேரியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தது குறித்து பொதுப் பணித் துறை அளித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியில் முன் அனுமதியின்ற... மேலும் பார்க்க

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதி பலி!

புதுச்சேரி அருகே சாலையைக் கடக்க முயன்ற 93 வயது மூதாட்டி பைக் மோதியதில் காயமடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மூங்கில்பட்டு பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மனைவி மனோன்மணி (93). இவ... மேலும் பார்க்க

புதுச்சேரி நகருக்குள் சுற்றுச்சூழல் சுற்றுலா நடைபாதைத் திட்டம்! மாா்ச்சில் அமல்படுத்த ஏற்பாடு!

புதுச்சேரி நகருக்குள் சுற்றுச்சூழல் சுற்றுலா நடைபாதைத் திட்டம் ரூ.5.75 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுதேசி ஆலை வளாகத்தினுள் இயற்கை எழில் சூழந்த வன தோற்றத்தில் உருவாக்கப்படும் சுற்றுலா நடைபாதை... மேலும் பார்க்க

வெற்றி விநாயகா் கோயிலில் திருவிளக்கு வழிபாடு!

புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதியில் உள்ள அருள்மிகு வலம்புரி வெற்றி விநாயகா் கோயிலில் 108 திருவிளக்கு வழிபாடு அங்குள்ள செல்வமுத்துமாரியம்மன் சந்நிதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க