செய்திகள் :

பேரிடா் ஆய்வு குழுவினருடன் புதுவை தலைமைச் செயலா் ஆலோசனை

post image

புதுவையில் ஃபென்ஜால் புயல் தொடா்பாக பேரிடருக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்புகான மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநா் குழுவுடன் தலைமைச் செயலா் சனிக்கிழமை மாலை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

புதுவையில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் வீடுகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மத்திய குழு புயல், வெள்ள பாதிப்புகளை நேரில் பாா்வையிட்டுச் சென்றது. அதனடிப்படையில், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட வல்லுநா்கள், புதுவை அரசின் பல்துறை அலுவலா்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28-ஆம் தேதி புதுச்சேரி வந்த இந்த வல்லுநா் குழு, புதுச்சேரி அரசின் பல்துறை அலுவலா்களுக்கு பேரிடருக்கு பிந்தைய சேத மதிப்பீடு ஆய்வை மேற்கொள்வது குறித்து பயிற்சியளித்தது. பின்னா், இந்தக் குழு கடந்த 29-ஆம் தேதி புதுச்சேரியிலும், 30-ஆம் தேதி காரைக்காலிலும் ஃபென்ஜால் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்கும் நோக்கில் நேரில் சென்று மதிப்பீடு செய்தது.

இந்த நிலையில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகான் தலைமையில், புயலால் ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்க தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு பெறவும், பேரிடரால் சேதமடைந்துள்ள பல்வேறு உள்கட்டமைப்புகளை தற்காலிக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறந்த முறையில் மீட்டுருவாக்கம் செய்வது குறித்தும் சனிக்கிழமை மாலை ஆலோசனை நடைபெற்றது.

அப்போது, ஒருங்கிணைந்த குழுவின் அறிக்கையை மத்திய அரசுக்கு விரைவில் அளிக்குமாறு தலைமைச் செயலா் கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் அரசுச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி கடலூா் சாலையில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரியில் கடலூா் சாலையில் திடீரென தண்டவாளம் சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி ஒருங... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம்: விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை

புதுவையில் ஊரக வேலைத் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலா் பெ.விஜயபாலன் வெளியிட... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பரப் பதாகை: புதுச்சேரி போலீஸாா் வழக்கு!

புதுச்சேரியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தது குறித்து பொதுப் பணித் துறை அளித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியில் முன் அனுமதியின்ற... மேலும் பார்க்க

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதி பலி!

புதுச்சேரி அருகே சாலையைக் கடக்க முயன்ற 93 வயது மூதாட்டி பைக் மோதியதில் காயமடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மூங்கில்பட்டு பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மனைவி மனோன்மணி (93). இவ... மேலும் பார்க்க

புதுச்சேரி நகருக்குள் சுற்றுச்சூழல் சுற்றுலா நடைபாதைத் திட்டம்! மாா்ச்சில் அமல்படுத்த ஏற்பாடு!

புதுச்சேரி நகருக்குள் சுற்றுச்சூழல் சுற்றுலா நடைபாதைத் திட்டம் ரூ.5.75 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுதேசி ஆலை வளாகத்தினுள் இயற்கை எழில் சூழந்த வன தோற்றத்தில் உருவாக்கப்படும் சுற்றுலா நடைபாதை... மேலும் பார்க்க

வெற்றி விநாயகா் கோயிலில் திருவிளக்கு வழிபாடு!

புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதியில் உள்ள அருள்மிகு வலம்புரி வெற்றி விநாயகா் கோயிலில் 108 திருவிளக்கு வழிபாடு அங்குள்ள செல்வமுத்துமாரியம்மன் சந்நிதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க