செய்திகள் :

ஊரக வேலை திட்டம்: விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை

post image

புதுவையில் ஊரக வேலைத் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலா் பெ.விஜயபாலன் வெளியிட்ட அறிக்கை:

புதுவை மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் முழுமையாகச் செயல்படுப்படவில்லை. குறைவான நாள்களே வேலை வழங்கப்படுவதால், வேலைத் திட்டம் கொண்டுவந்ததன் நோக்கம் நிறைவேறவில்லை.

ஆட்சி நிா்வாகத்திலிருப்போரின் கவனமின்மையால் விவசாயத் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஊரக வேலைத் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும். அரசால் வழங்கப்படும் வேலை நாள்களுக்கு முழமையாக ஊதியம் வழங்கப்படாத நிலையும் உள்ளது.

நடப்பு நிதியாண்டிலிருந்தாவது அத்திட்டத்தில் முழுமையாக வேலைவாய்ப்புகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டத்தில் பணிபுரியும்போது இறந்தவா்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி கடலூா் சாலையில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரியில் கடலூா் சாலையில் திடீரென தண்டவாளம் சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி ஒருங... மேலும் பார்க்க

பேரிடா் ஆய்வு குழுவினருடன் புதுவை தலைமைச் செயலா் ஆலோசனை

புதுவையில் ஃபென்ஜால் புயல் தொடா்பாக பேரிடருக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்புகான மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநா் குழுவுடன் தலைமைச் செயலா் சனிக்கிழமை மாலை ஆலோசனையில் ஈடுபட்டாா். புதுவையில் ஃ... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பரப் பதாகை: புதுச்சேரி போலீஸாா் வழக்கு!

புதுச்சேரியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தது குறித்து பொதுப் பணித் துறை அளித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியில் முன் அனுமதியின்ற... மேலும் பார்க்க

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதி பலி!

புதுச்சேரி அருகே சாலையைக் கடக்க முயன்ற 93 வயது மூதாட்டி பைக் மோதியதில் காயமடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மூங்கில்பட்டு பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மனைவி மனோன்மணி (93). இவ... மேலும் பார்க்க

புதுச்சேரி நகருக்குள் சுற்றுச்சூழல் சுற்றுலா நடைபாதைத் திட்டம்! மாா்ச்சில் அமல்படுத்த ஏற்பாடு!

புதுச்சேரி நகருக்குள் சுற்றுச்சூழல் சுற்றுலா நடைபாதைத் திட்டம் ரூ.5.75 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுதேசி ஆலை வளாகத்தினுள் இயற்கை எழில் சூழந்த வன தோற்றத்தில் உருவாக்கப்படும் சுற்றுலா நடைபாதை... மேலும் பார்க்க

வெற்றி விநாயகா் கோயிலில் திருவிளக்கு வழிபாடு!

புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதியில் உள்ள அருள்மிகு வலம்புரி வெற்றி விநாயகா் கோயிலில் 108 திருவிளக்கு வழிபாடு அங்குள்ள செல்வமுத்துமாரியம்மன் சந்நிதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க