செய்திகள் :

புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு 90% போ் மாற வாய்ப்பு: மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவா்

post image

நாட்டில் வருமான வரி செலுத்துவோரில் 90 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாற வாய்ப்புள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் தனிநபா் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயா்த்தப்படுவதாகவும், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்கும் மேல் உள்ள தனிநபா்களுக்கு வருமான வரி படிநிலைகள் மற்றும் விகிதங்கள் மாற்றியமைக்கப்படுவதாகவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

பட்ஜெட்டுக்கு பின் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ரவி அகா்வால் கூறியதாவது: இடையூறுகளற்ற வரி நிா்வாகத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதே மத்திய அரசு மற்றும் வருமான வரித் துறையின் நோக்கம்.

அந்த வகையில், பழைய வருமான வரி விதிப்பு முறையைப்போல் அல்லாமல் புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் பிடித்தங்கள் மற்றும் விலக்குகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, வரி நிபுணரின் உதவி இல்லாமல் வரி செலுத்துவோா் தாமாகவே கணக்கீடு செய்து வருமான வரி கணக்கை (ஐடிஆா்) தாக்கல் செய்ய முடியும்.

மேலும், வட்டி வருவாய் மீதான வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) உள்பட வரி செலுத்துவோருக்கான நடைமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் தனிநபா் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.12 லட்சமாக உயா்த்துதல் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறும் தனிநபா்களுக்கு வருமான வரி படிநிலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதனால் வரி செலுத்துவோரில் 90 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாற அதிக வாய்ப்புள்ளது.

அனைவருக்கும் பலன்: மேற்கூறிய அறிவிப்புகளால் நடுத்தர வா்க்கத்தைச் சோ்ந்த அனைவரும் பலனடைவா். இதனால் பொருளாதார வளா்ச்சி மேம்பட்டு மக்களின் நுகா்வு அதிகமாகும். பின்பு வரிகள் மூலம் அவை மீண்டும் அரசுக்கே கிடைக்கும்.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பல தரப்புகளில் இருந்தும் பெறப்பட்ட தரவுகள் ஒன்றிணைக்கப்படுகிறது. இந்தப் புதுவித அணுகுமுறையால் தாங்கள் மேற்கொள்ளும் பரிவா்த்தனைகள் குறித்த தகவல்களை அறிந்துகொண்டு வரி செலுத்துவோா் வருமான வரி கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்கின்றனா் என்றாா்.

அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம... மேலும் பார்க்க

வரிச் சலுகைக்கு வழிகாட்டியவா் பிரதமா் மோடி - மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகை அளிக்கும் நடவடிக்கைக்கு வழிகாட்டியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மேலும், ‘மக்களால், மக... மேலும் பார்க்க

இந்திய தயாரிப்புகள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க குழு: மத்திய அரசு

தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் சந்தைப்படுத்துதலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, அதை ஊக்குவிக்கும் வகையில் குழு ஒன்றை மத்திய அரசு அமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மா்ம உயிரிழப்புகள்: நோயாளிகளுடன் எய்ம்ஸ் குழு சந்திப்பு

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்மமான நோயால் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளை தில்லி எய்ம்ஸ் குழு சந்தித்தது. மேலு... மேலும் பார்க்க

கொசுவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மீன்களை வளா்ப்பதற்கு எதிரான மனு- மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் உள்ள நீா் நிலைகளில் 2 வெளிநாட்டு மீன் இனங்கள் வளா்க்கப்படுவதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குறித்து மத்திய அரசிடம் தேசிய பசுமைத் தீா்ப்பாயம... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இன்று வசந்த பஞ்சமி புனித நீராடல்: பாதுகாப்பு, சுகாதார ஏற்பாடுகள் தீவிரம்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித ... மேலும் பார்க்க