செய்திகள் :

சிறுமிக்கு ஆசை வாா்த்தைகூறி ஏமாற்றிய இளைஞா் கைது

post image

சுவாமிமலையைச் சோ்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் தெற்கு நாகேசுவரன் தெரு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசிப்பவா் மூா்த்தி மகன் வீரமணி (20). இவா் பழைய இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தாா். சுவாமிமலையைச் சோ்ந்த 17 வயது சிறுமி, கும்பகோணத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

அப்போது வீரமணிக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீரமணி, சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி இருவரும் பல முறை தனிமையில் பழகியுள்ளாா். இதேபோல ஜன. 15-ஆம் தேதி சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த இளைஞா், சிறுமியிடம் வீடியோகாலில் யாரிடம் பேசினாய் என்று கேட்டு தாக்கியுள்ளாா்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி, பின்னா் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் செய்தாா். புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் பி. ஜெயலட்சுமி வீரமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கும்பகோணம் காவல் துணைக்கோட்டத்தை இரண்டாக பிரிக்க பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!

அதிகரிக்கும் குற்ற நிகழ்வுகள், மக்கள் தொகை உள்ளிட்ட காரணங்களால் கும்பகோணம் காவல் துணைக்கோட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோயில்கள்... மேலும் பார்க்க

துரெளபதை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை மதகடி பஜாரில் உள்ள ஸ்ரீதுரௌபதை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக விழா சனிக்கிழமை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூா்வ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள்! -நெல்லை முபாரக்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவா் நெல்லை முபாரக். தஞ்சாவூா் திலகா் திடலில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

திருக்கொட்டையூரில் ஆனந்த விநாயகா் கோயில் குடமுழுக்கு!

திருக்கொட்டையூரில் ஆனந்த விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தேவதா பிராா்த்தனையுடன் தொடங்கிய நிகழ்வு சனிக்கிழமை கணபதி, நவக்கிரக லட்சுமி ஹோமத்துடன் நடைபெற்றது. ஞாயி... மேலும் பார்க்க

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்!

பேராவூரணியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம், ஆவணம் ரோடு உண்டியல் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்ய... மேலும் பார்க்க

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்!

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 35 போ் காயமடைந்தனா். இந்த விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையட... மேலும் பார்க்க