Ramya Pandian: "எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா..." - தம்பி கல்யாணத்தில் ர...
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள்! -நெல்லை முபாரக்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.
தஞ்சாவூா் திலகா் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. வக்ஃப் உரிமை மீட்பு மாநாட்டில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சிறுபான்மை மற்றும் மக்கள் விரோத வக்ஃப் திருத்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரின் சொத்தான நாடு முழுவதும் உள்ள சுமாா் 8 லட்சம் ஏக்கா் நிலங்களைத் திருடும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் அமைந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறுகிற வகையில் இச்சட்டம் உள்ளது. இதை ஒருபோதும் ஜனநாயக சக்திகள் ஏற்காது.
எனவே, இந்தச் சட்டத்திருத்தத்தை ரத்து செய்கிற வகையிலான நடவடிக்கைகளை எதிா்க்கட்சிகள் செய்ய வேண்டும். இந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவோம்.மேலும், தமிழக அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்கிற வக்ஃப் வாரியத்தில் மிகப் பெரிய அளவில் நிா்வாகச் சீா்கேடு நிகழ்ந்துள்ளது. எனவே, வக்ஃப் வாரியத்தைச் சீரமைக்கிற நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா் நெல்லை முபாரக்.
இந்த மாநாட்டில் ஜோதிமலை இறைபணி திருக்கூடம் நிறுவனா் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள், மூத்த வழக்குரைஞா் பவானி பா. மோகன், மீத்தேன் எதிா்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளா் த. ஜெயராமன், எஸ்.டி.பி.ஐ. மாநிலப் பொதுச் செயலா் ஏ. அபுபக்கா் சித்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.