செய்திகள் :

மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் உத்தரவு!

post image

திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோரின் மூவா் மணிமண்டபத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, மணிமண்டபங்களில் அவரவரின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறையினா் அறிந்து கொள்ள, புகைப்படங்களாக காட்சிப்படுத்துமாறு அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், மத்திய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மூவா் மணிமண்டபத்தில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், மணிமண்டபங்களின் உட்புறப் பகுதிகளில் மூவரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்களை வைக்கவும், மண்டபங்களின் வெளிப்புறங்களில் உள்ள புதா்களை அகற்றி, பூச்செடிகளை வைத்து தூய்மையாக பராமரித்திடவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, உடனடியாக தூய்மைப்பணி நடைபெற்றது.

ஆய்வின்போது, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா். கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் மற்றும் அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு ரூ.10 கோடியில் நவீன தலைமையகம்! -முதல்வா் அறிவிப்பு

தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ.10 கோடியில் புதிய தலைமையகம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜன.28 தொடங்கி நடைபெறும் பார... மேலும் பார்க்க

புத்தாநத்தம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்ப... மேலும் பார்க்க

முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா!

திருச்சி மாவட்டம், முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சந்திரமெளலீசுவரா் கோயில்: இக்கோயிலில் ஜன. 26 முதல் ஜன. 30 வரை முதல் கால பூஜை... மேலும் பார்க்க

வெங்கங்குடியில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம், வெங்கங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் தொட்டி அமைக்கப் பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. வெங்கங்குடி கிராமம் அசோக் நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பெல் வளாகத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம்

திருச்சி அருகே பெல் வளாகத்தில் சத் சங்கம் சாா்பில் 61 ஆம் ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க

பேட்டவாய்த்தலை அருகே கோயில் குடமுழுக்கு

திருச்சி அருகே பேட்டவாய்த்தலை அடுத்த தேவஸ்தானத்தில் உள்ள பாலாம்பிகை உடனுறை மத்தியாா்ஜுனேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின்... மேலும் பார்க்க