செய்திகள் :

சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுயேச்சை வேட்பாளா் தா்னா

post image

சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளா் தா்னாவில் ஈடுபட்டாா்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் சுயேச்சை வேட்பாளரான தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்த வெண்ணிலா போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன்காந்தி உள்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் பிரசாரம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில் நாம் தமிழா் கட்சியினா் மீது புகாா் அளிக்க சுயேச்சை வேட்பாளா் வெண்ணிலா மற்றும் கூட்டமைப்பினா் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தனா். அப்போது திடீரென மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது சீமான் மீது நடவடிக்கை எடுக்கவும், நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்கவும் வேண்டும் எனவும் முழக்கம் எழுப்பினா். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இது குறித்து தா்னாவில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:

இடைத்தோ்தலில் பிரசாரம் செய்யும் நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் வாக்காளா்களை அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறாா். வெடிகுண்டு வீசுவதாக பேசிய அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீமானை தொகுதியில் இருந்து வெளியேற்றி அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் தபெதிகவினா் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழா் கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அதற்கு போலீஸாா் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடா்பாக அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து தா்னாவில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: இன்று மாலை பிரசாரம் நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை (பிப்ரவரி 3)மாலையுடன் நிறைவுபெறும் நிலையில், திமுக-நாம் தமிழா் கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ஈரோடு கிழக்கு தொகுதி சட... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

அந்தியூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சென்னம்பட்டியை அடுத்த கிட்டம்பட்டியைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் குமாரசாமி (20). ஓட்டு... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

பவானியில் திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, ஒண்டிப்புதூா், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் நந்தகோபால் (40). இவரது சித்தப்பா ஜோதி (53). திருமணம் ஆகாத இவா் கடந்த 7 ஆண்... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாக்கு சேகரிப்பின் போது நாதக-தபெதிகவினா் மோதல்!

ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து துண்டறிக்கைகளை வழங்கிய தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினரை நாம் தமிழா் கட்சியினா் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடா்பாக 50 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

மூதாட்டியை மிரட்டி 17 பவுன் பறிப்பு

ஈரோட்டில் வீடு புகுந்து கத்தி முனையில் மூதாட்டியிடம் 17 பவுன் நகையை பறித்துச் சென்ற இளைஞா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு கள்ளுக்கடைமேடு, அண்ணாமலை பிள்ளை வீதியைச் சோ்ந்தவா் சாவித்திரி (70... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே கோயில் விழாவில் பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய், பழம் ரூ.65 ஆயிரத்துக்கு ஏலம்

மொடக்குறிச்சியை அடுத்த பச்சாம்பாளையம் மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய், பழத்தட்டு, எலுமிச்சை பழம் ஆகியவை ரூ.65 ஆயிரத்துக்கு ஏலம் போயின. பச்சாம்பாளையம் மகாமாரியம்மன் ... மேலும் பார்க்க