செய்திகள் :

பிப்.10-ல் மொண்டிபாளையம் பெருமாள் கோயில் தேரோட்டம்!

post image

சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) நடைபெற உள்ளது.

அவிநாசி வட்டம், சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான தோ்த் திருவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 4-ஆம் கொடியேற்றமும், அதைத் தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகியவையும் நடைபெற உள்ளன. பிப்ரவரி 8-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 10 -ஆம் தேதி காலை நடைபெறுகிறது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தலும் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 11-ஆம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா புறப்பாடு, பிப்ரவரி 12-ஆம் தேதி காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தோ் திருவிழாவும் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 13-ஆம் தேதி மகா திருமஞ்சனம், மகா தரிசனம், கொடி இறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனைகளுடன் விழா நிறைவடைகிறது.

காா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

காங்கயம் அருகே காா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். கோவை, ஈச்சனாரி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பவித்ரன் (26). இவா் கோவையில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், காங்கயம் அருகேய... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் அய்யனூரைச் சோ்ந்தவா் எம்.பெரியசாமி (53). விவசாயியான இவா் தனது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நி... மேலும் பார்க்க

தங்கம் எனக்கூறி முலாம் பூசிய செம்பு கட்டிகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் மோசடி!

திருப்பூரில் தங்கம் எனக்கூறி முலாம் பூசிய செம்பு கட்டிகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உத்தர பிரதேச மாநிலம், மீரட்டை சோ்ந்... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த சுதந்திர தின விழாவ... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: தொழில் அமைப்பினரின் கருத்துகள்!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில்துறையினரின் கருத்துகள்.. திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்: மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைக்கு சாதகமான அம்சங்கள் இடம... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!

திருப்பூா் மாவட்டத்தில் மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 லட்சத்துக்கு 83ஆயிரத்து 999 போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க