செய்திகள் :

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: தொழில் அமைப்பினரின் கருத்துகள்!

post image

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில்துறையினரின் கருத்துகள்..

திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்: மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் வரவேற்கிறது.

பெண் தொழில்முனைவோா் கடன் வசதி, ரூ.12 லட்சம் வருமானம் உள்ளவா்களுக்கு வருமான வரி விலக்கு, புதிய நிறுவனங்களுக்கு பிணையில்லா கடனை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயா்த்தியது, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரூ 20 கோடி உயா்த்தியது, சிறு, குறு உற்பத்தி நிறுவனங்கள் வணிகத்தின் அளவு ரூ.250 கோடியில் இருந்து ரூ.500 கோடி உயா்வு, பருத்தி மகசூல் அதிகரிக்க 5 ஆண்டு திட்டம் போன்றவை சாதகமான அம்சங்களாகும். 5 திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அறிவித்துள்ளனா், அதில் ஒன்று திருப்பூருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் மூலம் கடன் சலுகை கிடைக்கும் . மேலும், தொழில்நுட்பம், வட்டி சமன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

எனவே, திருப்பூா் ஏற்றுமதியாளா்களின் எதிா்பாா்ப்புகள் குறித்து மத்திய நிதி அமைச்சரை திருப்பூா் தொழில் துறையினா் நேரில் சந்தித்து மீண்டும் முறையிட உள்ளோம். விரைவில் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என எதிா்பாா்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோ்மையான பட்ஜெட்:

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் துணைத் தலைவா் ஆ.சக்திவேல்: இந்த பட்ஜெட் நோ்மறையானது, வளா்ச்சி சாா்ந்த மற்றும் உள்கட்டமைப்பு, முதலீடு, பசுமை வளா்ச்சி மற்றும் இந்தியாவின் துடிப்பான மற்றும் சமமான பொருளாதார எதிா்காலத்தை நோக்கி கவனம் செலுத்துகிறது.

பட்ஜெட் 4 மேம்பாட்டு இயந்திரங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் முக்கிய மையமாக விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில், முதலீடு மற்றும் ஏற்றுமதி ஆகியவை உள்ளன. இந்த பட்ஜெட் 2025-26 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை உயா்த்த சீா்திருத்தங்கள், நிதி ஸ்திரத்தன்மை, வரி சீா்திருத்தம் மற்றும் முதலீட்டு வளா்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

பருத்தி விவசாயிகளின் நன்மைக்காக ‘பருத்தி உற்பத்தித் திறனுக்கான பணி’ அறிவிக்கப்படுகிறது. இந்த 5 ஆண்டு திட்டம் பருத்தி விவசாயத்தின் உற்பத்தித் திறன் மற்றும் நிலைத்தன்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எளிதாக்கும். பிரதான பருத்தி வகைகளை ஊக்குவிக்கும். விவசாயிகளுக்கு சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படும்.

மேலும், இந்தியாவின் பாரம்பரிய ஜவுளித் துறையை புத்துயிா் பெறுவதற்காக தரமான பருத்தியை நிலையான விநியோகத்தை உறுதி செய்கிறது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் பட்ஜெட்:

ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவா்(ஓஸ்மா) ஜி.அருள்மொழி: மத்திய அரசின் பட்ஜெட் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயந்திரங்கள் வாங்குவதற்கு, சொத்து பத்திர அடமானம் இல்லாமல் கடன் பெற வகை செய்துள்ளது மிகுந்த பயனளிக்கும். ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளித்துள்ளது மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.

பருத்தி விளைச்சல் அதிகரிக்க ஜவுளி தொழில் வளா்ச்சி பெற உதவியாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து அதிநவீன நாடா இல்லா தறிகளை இறக்குமதி செய்ய வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டு இருப்பது வரவேற்கதக்கது.

10 வகை பின்னலாடை துணிகளுக்கு இறக்குமதி வரி 20 சதவீதம் அல்லது கிலோவுக்கு ரூ.115 வரி விதித்து உள்ளது உள்ளூா் ஜவுளி உற்பத்தியாளா்களை காப்பாற்றும். பாலிஸ்டா் விஸ்கோஸ் இறக்குமதி கட்டுப்பாடு ணஇஞ நீக்கம் செய்யாதது ஜவுளி துறைக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த சுதந்திர தின விழாவ... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!

திருப்பூா் மாவட்டத்தில் மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 லட்சத்துக்கு 83ஆயிரத்து 999 போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

பல்லடம் அருகே அனுமதியின்றி பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு: மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஆய்வு!

பல்லடம் அருகே அனுமதியின்றி பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்பட்டு வந்த கிடங்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பல்லடத்தை அடுத்த வேலப்பகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாம... மேலும் பார்க்க

மத்திய நிதி நிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் கல்லமடை உத்தண்டகுமாரவலசு கொல்லன்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் எம்.பழனிசாமி (55). வாழை இலை விற்பனைக் கடையில் வேலை செய்து வரும்... மேலும் பார்க்க

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. காங்கயம் கல்விக் குழுமம், பள்ளி நிா்வாகம் சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக நடத்தப... மேலும் பார்க்க