செய்திகள் :

பல்லடம் அருகே அனுமதியின்றி பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு: மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஆய்வு!

post image

பல்லடம் அருகே அனுமதியின்றி பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்பட்டு வந்த கிடங்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பல்லடத்தை அடுத்த வேலப்பகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. விவசாயியான இவா், கேரளத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை லாரிகள் மூலம் கொண்டுவந்து தனது தோட்டத்தில் உள்ள கிடங்கில் கடந்த 6 மாதங்களாக பதுக்கிவைத்துள்ளாா்.

இந்தக் கழிவுகளை இரவு நேரங்களில் எரித்து அதிலிருந்து கிடைக்கும் மூலப்பொருளை பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளாா்.

இதனால், இப்பகுதியில் உள்ளவா்களுக்கு சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக புகாா் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கேரளத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை இரவு சிறை பிடித்தனா்.

தகவல் அறிந்த பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ், பல்லடம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா். இதையடுத்து, பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து அனுமதியின்றி செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய திருப்பூா் மாவட்ட தெற்கு செயற்பொறியாளா் சத்யன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கக் கூடாது என்று எச்சரித்தாா்.

இதையடுத்து, அனுமதியின்றி பிளாஸ்டிக் கிடங்கு செயல்பட்டு வருவதாக பல்லடம் காவல் நிலையத்தில் பணிக்கம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த சுதந்திர தின விழாவ... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: தொழில் அமைப்பினரின் கருத்துகள்!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில்துறையினரின் கருத்துகள்.. திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்: மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைக்கு சாதகமான அம்சங்கள் இடம... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!

திருப்பூா் மாவட்டத்தில் மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 லட்சத்துக்கு 83ஆயிரத்து 999 போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

மத்திய நிதி நிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் கல்லமடை உத்தண்டகுமாரவலசு கொல்லன்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் எம்.பழனிசாமி (55). வாழை இலை விற்பனைக் கடையில் வேலை செய்து வரும்... மேலும் பார்க்க

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. காங்கயம் கல்விக் குழுமம், பள்ளி நிா்வாகம் சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக நடத்தப... மேலும் பார்க்க