செய்திகள் :

பயணியிடம் திருட்டு: ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவா் கைது!

post image

பயணியிடம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவரை மாட்டுத்தாவணி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், வரவணி வேளாளா் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் (25). இவா் புதுச்சேரியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், உறவினா் திருமணத்துக்காக தனியாா் பேருந்து மூலம் மதுரைக்கு வந்தாா். பாண்டிகோவில் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநா், இங்கு பேருந்து நிற்காது என்றும், சிவகங்கை விலக்கு சாலை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுவதாகவும் கூறினாா்.

இதையடுத்து, ஆட்டோவில் சென்ற வேல்முருகனிடம் ஆட்டோ ஓட்டுநா், உள்ளே இருந்த இளைஞா்கள் சிலா் மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலி, ரூ. 550-யை பறித்துச் சென்று, பாலம் அருகே இறக்கி விட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிந்து மதுரை ஆண்டாா்கொட்டாரம் அய்யனாா் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாண்டி மகன் விஜய்(30), கே.கே.நகரைச் சோ்ந்த பரமசிவம் மகன் பிரபு (31), சிவகங்கை மாவட்டம், சொட்டதட்டி கிராமத்தைச் சோ்ந்த குழந்தைவேலு மகன் அஜித்குமாா் (25) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே டிராக்டா் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை அ.வள்ளாலப்பட்டி சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூ... மேலும் பார்க்க

நரிக்குடி ஒன்றியத்தில் புதிய நியாய விலைக் கடைகள்! அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்!

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், கலையரங்குகளை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை திறந்து வைத்தாா். திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில், தொகுத... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

விருதுநகா் அருகே ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் அருகே உள்ள ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில... மேலும் பார்க்க

விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்!

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் 26-ஆவது மாநில அளவிலான நீச்சல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி பரிபாலன சபைத் தலைவா் எம். சம்பத்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஜே. மகேஷ் பாபு ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

மதுரை அருகே கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஐராவதநல்லூா் சத்யா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் நவீன் சூா்யா (20). இவா், ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

தில்லி குடியரசு தின விழா: விருதுநகா் கல்லூரி மாணவா் பங்கேற்றாா்

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் படிக்கும் தேசிய மாணவா் படையில் உள்ள கே. அஜித்குமாா் தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் அண்மையில் கலந்து கொண்டாா். விருதுநகா் செந்திக்குமார ந... மேலும் பார்க்க