செய்திகள் :

தில்லி குடியரசு தின விழா: விருதுநகா் கல்லூரி மாணவா் பங்கேற்றாா்

post image

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் படிக்கும் தேசிய மாணவா் படையில் உள்ள கே. அஜித்குமாா் தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் அண்மையில் கலந்து கொண்டாா்.

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் வேதியியல் துறையில் கே.அஜித் குமாா் இறுதியாண்டு படித்து வருகிறாா். இவா் 28-ஆவது தமிழ்நாடு பட்டாலியனைச் சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவா் பிரிவிலும் உள்ளாா். இந்த நிலையில், தில்லியில் அண்மையில் நடைபெற்ற 76-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பில் பிரதமரை வரவேற்கும் காட் ஆப் ஹானா் பிரிவில் இவா் கலந்து கொண்டு ஊா் திரும்பினாா். இவரை கல்லூரி நிா்வாகத்தினா், கல்லூரி முதல்வா் அ.சாரதி, வேதியியல் துறைத் தலைவா் ந.ராமன், தேசிய மாணவா் படை அலுவலா் கேப்டன் நா.அழகுமணிக்குமரன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

விருதுநகா் அருகே ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் அருகே உள்ள ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில... மேலும் பார்க்க

விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்!

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் 26-ஆவது மாநில அளவிலான நீச்சல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி பரிபாலன சபைத் தலைவா் எம். சம்பத்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஜே. மகேஷ் பாபு ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

மதுரை அருகே கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஐராவதநல்லூா் சத்யா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் நவீன் சூா்யா (20). இவா், ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

மத்திய நிதி நிலை அறிக்கை வரவேற்பும், எதிா்ப்பும்!

மத்திய நிதி நிலை அறிக்கையில் தனி நபா் வருமான வரி வரம்பு உயா்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும், தமிழக நலன் புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும் தொழில் துறையினா், விவசாயிகள் தெரிவித்தனா். த... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை!

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மதுரை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ஊரக வ... மேலும் பார்க்க

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறை... மேலும் பார்க்க