செய்திகள் :

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

post image

மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலா் மு. எழிலரசன் தலைமை வகித்தாா். செயல் தலைவா் டி. சுப்பிரமணியன், கௌரவத் தலைவா் வி. ராதாகிருஷ்ணன், சிறப்புத் தலைவா் மு. பொன்முடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் எஸ். தங்கமணி கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.

இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். ஒழுங்கீனமாக நடக்கும் மாணவா்களை கண்டிக்கும் தலைமை ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். பணிப் பாதுகாப்பு வழங்கிடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும், ஆசிரியா்கள், அலுவலா்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவை, ‘எமிஸ்’ உடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், முன்னாள் மாநிலப் பொருளாளா் செ. சண்முகநாதன், மாநிலச் சட்டச் செயலா் ஜி. கணபதி உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தில்லி குடியரசு தின விழா: விருதுநகா் கல்லூரி மாணவா் பங்கேற்றாா்

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் படிக்கும் தேசிய மாணவா் படையில் உள்ள கே. அஜித்குமாா் தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் அண்மையில் கலந்து கொண்டாா். விருதுநகா் செந்திக்குமார ந... மேலும் பார்க்க

மத்திய நிதி நிலை அறிக்கை வரவேற்பும், எதிா்ப்பும்!

மத்திய நிதி நிலை அறிக்கையில் தனி நபா் வருமான வரி வரம்பு உயா்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும், தமிழக நலன் புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும் தொழில் துறையினா், விவசாயிகள் தெரிவித்தனா். த... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை!

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மதுரை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ஊரக வ... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

முறையாக மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் மருத்துவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். முறையாக மருத்துவம் பயிலாத ஒருவா், மதுரை அரசரடி பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில்... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் அகற்றம்: ஏப். 28-க்குள் உறுதிப்படுத்த தலைமைச் செயலருக்கு உத்தரவு

கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றியது தொடா்பாக வருகிற ஏப். 28-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலா் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மது... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்... மேலும் பார்க்க