செய்திகள் :

வாஷிங்டன் விமான விபத்து: ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்பு

post image

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் விமானத்துடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கபட்டது.

ஏற்கெனவே, ஹெலிகாப்டா் மோதியதால் பொடோமேக் ஆற்றில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஏா்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது ஹெலிகாப்டா் கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது கிடைத்துள்ளதான் அந்த ஹெலிகாப்டரை யாா் இயக்கியது, அது அளவுக்கு அதிகமான உயரத்தில் பறக்கச் செய்யப்பட்டதா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

60 பயணிகள், 4 பணியாளா்களுடன் அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமானம் ரீகன் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக, அங்கு 3 பேருடன் வந்த ராணுவ ஹெலிகாப்டா் அதன் மீது மோதியது. இதையடுத்து, விமானம் நொறுங்கி பொடோமேக் ஆற்றில் விழுந்தது. விமானத்துடன் மோதிய ஹெலிகாப்டரும் ஆற்றுக்குள் நொறுங்கி விழுந்தது. இந் விபத்தில், விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்த 67 பேரும் உயிரிழந்தனா். அவா்களில் 41 பேரது உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

பாக்.: மோதலில் 18 வீரா்கள், 23 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 18 வீரா்கள், 23 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா். இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம்: டிரம்ப் பரிந்துரையை நிராகரித்தன அரபு நாடுகள்

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரிந்துரையை அரபு நாடுகளின்... மேலும் பார்க்க

இலங்கை: வாகன இறக்குமதி தடை நீக்கம்

வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசு சனிக்கிழமை முழுமையாக நீக்கியது. இது தொடா்பான அதிபா் அனுர குமார திசநாயக்கவின் அறிவிப்பு அரசிதழில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

உக்ரைன் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்: 6 பேர் பலி

உக்ரைன் மீது ரஷிய நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். உக்ரேனிய நகரமான பொல்டாவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் ஐந்... மேலும் பார்க்க

மேலும் 3 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 3 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் சனிக்கிழமை விடுவித்தனா்.இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!

அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் வெள்ளிக்கிழமை இரவு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறியதால், விபத்துக்குள்ளான பகுதியில் பதற்றம் நிலவுகிறது.அம... மேலும் பார்க்க