செய்திகள் :

விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்!

post image

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் 26-ஆவது மாநில அளவிலான நீச்சல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி பரிபாலன சபைத் தலைவா் எம். சம்பத்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஜே. மகேஷ் பாபு போட்டியைத் தொடங்கிவைத்தாா். போட்டியில் சென்னை, திருவள்ளுவா், திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், விருதுநகா், தூத்துக்குடி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 349 போ் கலந்து கொண்டனா்.

இதில் ப்ரீஸ்டைல், ப்ரஸ்ட் ஸ்ட்ரோக், பேக்ஸ்ட்ரோக், பட்டா் பிளை, மெட்லே ஆகிய பிரிவுகளில் வயது வாரியாக நடைபெற்ற போட்டிகளில் ஒட்டுமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை மதுரை அகுவாடிக் அசோசியேசன்ஸ் அணிக்கு வி.பி.பி.கே.சின்னத்துரை நாடாா் சுழற்கோப்பையும், இரண்டாமிடம் பெற்ற மதுரை பிளாஸ் ஆக்டிவிட்டி சென்டருக்கு எம்.தா்மராஜன் நினைவு சுழற்கோப்பையும் வழங்கப்பட்டன.

இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, கல்லூரி முதல்வா் அ. சாரதி வரவேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை இயக்குநா் த.முருகேசன், உடற் கல்வித் துறைத் தலைவா் கே.செல்வக்குமாா், ஆா்.சம்பத் குமாா், எம்.ராம்குமாா் பி.ரேவதி ஆகியோா் செய்தனா்.

டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே டிராக்டா் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை அ.வள்ளாலப்பட்டி சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூ... மேலும் பார்க்க

பயணியிடம் திருட்டு: ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவா் கைது!

பயணியிடம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவரை மாட்டுத்தாவணி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், வரவணி வேளாளா் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் (25). இவா் புதுச்சேரியில... மேலும் பார்க்க

நரிக்குடி ஒன்றியத்தில் புதிய நியாய விலைக் கடைகள்! அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்!

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், கலையரங்குகளை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை திறந்து வைத்தாா். திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில், தொகுத... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

விருதுநகா் அருகே ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் அருகே உள்ள ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

மதுரை அருகே கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஐராவதநல்லூா் சத்யா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் நவீன் சூா்யா (20). இவா், ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

தில்லி குடியரசு தின விழா: விருதுநகா் கல்லூரி மாணவா் பங்கேற்றாா்

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் படிக்கும் தேசிய மாணவா் படையில் உள்ள கே. அஜித்குமாா் தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் அண்மையில் கலந்து கொண்டாா். விருதுநகா் செந்திக்குமார ந... மேலும் பார்க்க