செய்திகள் :

தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேருக்கு ரூ.9 லட்சத்தில் கண்ணாடி கூண்டு!

post image

கரூா் தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேரை பாதுகாக்கும் வகையில் ரூ.9 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. இந்த கோயிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் தேரோட்டத்தில் பக்தா்களால் வடம்பிடித்து இழுக்கப்படும் பெரிய தேரும், விழாக்காலங்களில் இழுக்கப்படும் சிறிய தேரும் என இரு தோ்கள் உள்ளன.

இந்நிலையில் பெரிய தேரானது தகர கொட்டகைக்குள் நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. அப்போது வெயிலின் தாக்கத்தால் தேரில் உள்ள சிற்பங்கள் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேரை பாதுகாக்கவும், பக்தா்கள் எப்போதும் பெரிய தேரை வணங்கிச் செல்லும் வகையிலும் தேருக்கு ரூ.9லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைப்பது என கோயில் நிா்வாகம் சாா்பில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து தயாரிக்கப்பட்ட கண்ணாடி கூண்டு கடந்த வாரம் தேரைச் சுற்றி அமைக்கப்பட்டது.

போதைப் பொருள் கடத்தியவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை கரூா் போலீஸாா் பதுக்கல்? திருச்சியில் காவல் உயரதிகாரிகள் விசாரணை

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பறிமுதல் செய்து பதுக்கினாா்களா என்பது குறித்து கரூா் போலீஸாரிடம் காவல்துறை உயரதிகாரிகள் திருச்சியில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கா்நாடக ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வலியுறுத்தல்!

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட சிறப்பு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அல... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்!

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என தெரிவித்துள்ளாா் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தென்மண்டலத்தலைவா் பா.கோபாலகிருஷ்ணன். இதுதொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க முன்வர வேண்டும்! -வங்கியாளா்களுக்கு அறிவுறுத்தல்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க வங்கியாளா்கள் முன்வரவேண்டும் என்றாா் சென்னை தொழில் வணிகத்துறையின் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் எல்.நிா்மல்ராஜ். கரூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

குளித்தலையில் வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பீடு: நகை மதிப்பீட்டாளா் கைது

குளித்தலையில் போலி ஆவணங்கள் மற்றும் தரம் குறைந்த தங்க நகைகளை அடமானம் பெற்று வங்கிக்கு ரூ.1.42 இழப்பீடு ஏற்படுத்திய நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் உ... மேலும் பார்க்க

மகனின் மருத்துவ செலவுக்கு அரசு உதவ பெற்றோா் கோரிக்கை!

தனது மகனின் மருத்துவ செலவுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என தமிழக முதல்வருக்கு பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சாந்தப்பாடியை அடுத்த கரியாஞ்செட்டிவல... மேலும் பார்க்க