மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
போதைப் பொருள் கடத்தியவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை கரூா் போலீஸாா் பதுக்கல்? திருச்சியில் காவல் உயரதிகாரிகள் விசாரணை
போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பறிமுதல் செய்து பதுக்கினாா்களா என்பது குறித்து கரூா் போலீஸாரிடம் காவல்துறை உயரதிகாரிகள் திருச்சியில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கா்நாடக மாநிலம், பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா பொருள்கள் கரூா் வழியாக கடத்தப்படுவதாக வெங்கமேடு போலீஸாருக்கு வியாழக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெங்கமேடு குளத்துப்பாளையம் மேம்பாலம் பகுதியில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா், தாந்தோன்றிமலை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், வெங்கமேடு தனிப்பிரிவு தலைமைக் காவலா் ரகுநாத் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே வந்த காரை சோதனையிட்டபோது, 168 கிலோ எடைகொண்ட ரூ.1.32 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் இருந்தன. இதையடுத்து குட்கா பொருள்கள் மற்றும் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், குட்கா பொருள்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜலாா் பகுதியைச் சோ்ந்த கேவா்சன்(40), ஹரிராம்(27), சுரேஷ்(19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தொடா்ந்து மூவரையும் போலீஸாா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தபோது, கடத்தல்காரா்கள் வைத்திருந்த ரூ.1.25 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து கணக்கில் காட்டாமல் பதுக்கியதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து வெங்கமேடு காவல் ஆய்வாளா்(பொறுப்பு) மணிவண்ணன், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோரிடம் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவா் அலுவலகத்தில் உயா் அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது குட்கா கடத்தி வந்தவா்களிடம் இருந்த பணத்தை பதுக்கினாா்களா என்பது விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இந்த விசாரணையில் மேலும் பல போலீஸாா் சிக்குவாா்கள் என போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.