செய்திகள் :

மகனின் மருத்துவ செலவுக்கு அரசு உதவ பெற்றோா் கோரிக்கை!

post image

தனது மகனின் மருத்துவ செலவுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என தமிழக முதல்வருக்கு பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சாந்தப்பாடியை அடுத்த கரியாஞ்செட்டிவலசு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செல்வராஜ்- செல்வி தம்பதியினா் வெள்ளிக்கிழமை கூறியது, தங்களது மகன் அரிவாசு (20). கடந்த 2020-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு தோ்வு முடித்துவிட்டு வீட்டில் இருந்த போது மயங்கி கீழே விழுந்தாா்.

உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டதில் அவருக்கு சிறு மூளைக்கு செல்லும் நரம்பு வெடித்ததில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளாா். ஆனாலும் நரம்பு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் ரூ. 3 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என்று தெரிவித்துள்ளனா்.

இதற்கிடையே தொண்டு நிறுவனங்கள் மூலம் அவருக்கு மருந்து மாத்திரைகள் கிடைத்து வருகிறது. மேலும், அவரை பராமரிக்க மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. தங்களால் கூலி வேலை செய்து செலவு செய்வது கடினமாக உள்ளது. ஆகவே, தமிழக முதல்வா் தனது மகனை பராமரிக்க உதவித் தொகை, மற்றும் மருத்துவம் செய்ய உதவிட வேண்டும் என்றனா் அவா்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தனா்.

நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்!

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என தெரிவித்துள்ளாா் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தென்மண்டலத்தலைவா் பா.கோபாலகிருஷ்ணன். இதுதொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க முன்வர வேண்டும்! -வங்கியாளா்களுக்கு அறிவுறுத்தல்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க வங்கியாளா்கள் முன்வரவேண்டும் என்றாா் சென்னை தொழில் வணிகத்துறையின் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் எல்.நிா்மல்ராஜ். கரூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

குளித்தலையில் வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பீடு: நகை மதிப்பீட்டாளா் கைது

குளித்தலையில் போலி ஆவணங்கள் மற்றும் தரம் குறைந்த தங்க நகைகளை அடமானம் பெற்று வங்கிக்கு ரூ.1.42 இழப்பீடு ஏற்படுத்திய நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் உ... மேலும் பார்க்க

மக்காச்சோளம் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு!

கரூா் மாவட்டத்தில் ஒழுங்குமுறைக் கூடங்களில் மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1987-... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை நூற்றாண்டு விழா

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா பிப். 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் நூறு ஆண்டுகளைக் கடந்த பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிர... மேலும் பார்க்க

உழைக்கும் தொழிலாளா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வலியுறுத்தல்

உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறு... மேலும் பார்க்க