செய்திகள் :

மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

post image

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புதித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தி நிகழ்வுக்கு உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது இதுவே முதல்முறை என்ற சாதனையையும் மகா கும்பமேளா படைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

இதுவரை நேற்று வரையிலான தரவுகளின்படி, இதுவரை 33 கோடி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

ஜனவரி மாதம் வரையில் 29.6 கோடி பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகைபுரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பிப்ரவரி முதல் நாளில் சுமார் 3 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

வார இறுதி நாள்கள் என்பதால் கடந்த இரு நாள்களாக பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

சத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ஜாசத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 8 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மாவட்டத்தின் கங்களூா் காவல் நிலையத்தின் எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் ... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒருபகுதியாக சனிக்கிழமை தமிழகம் 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தம... மேலும் பார்க்க

கைப்பேசிகள் விலை குறைய உள்ளன!

மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளைத் தொடா்ந்து, கைப்பேசிகள் உள்ளிட்டவற்றின் விலை குறைய உள்ளன; ஸ்மாா்ட் மீட்டா் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்க உள்ளன. விலை குறையும் பொருள்கள் கைப்பேசிகள் உயிா... மேலும் பார்க்க

புல்லட் காயங்களுக்கு பேண்ட்-எய்ட்: ராகுல் காந்தி

புல்லட் காயங்களுக்கு பேண்ட்-எய்ட் போடுவதுபோல மத்திய பட்ஜெட் உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்... மேலும் பார்க்க

கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்தியாவை 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட ஒரு பெரிய தளவாட அமைப்பாக மாற்றும் திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். மேலும், அஸ்ஸாமில் 12.7 லட்சம் டன் ... மேலும் பார்க்க

குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிஸா மாநில கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் நடைபெற்ற குறுகிய தொலைவு வான்பாதுகாப்பு ஏவுகணையின் சோதனை வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது என்று பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது. சோதனை நடத்தப்பட்... மேலும் பார்க்க